'கடவுள் வாழ்த்து' அதிகாரத்திற்கு அடுத்ததாக 'வான் சிறப்பு' அமைத்திருக்கும் திருவள்ளுவர், இயற்கையின் ஒப்பற்ற பிரதிநிதியாக வான் மழையாக கொள்கிறார் எனலாம்.
இந்த அதிகாரத்துடன் என் கற்பனை இப்படி ஓடுகிறது. வானிலிருந்து மிகப்பெரிய மழைத்துளிகள் 3 பெய்கின்றன. வண்ணத்துடன் ஆரவாரத்துடன் அவை பொழிவதாக கற்பனைக் கொள்ளலாம்.
முதல் துளி.. தனி மனிதனுக்கு பயன் தருகிறது. உயிரினங்களுக்கும் இது பொருந்தும். முதல் 3 குறள்கள் இதை புலப்படுத்துகின்றன. அமிழ்தம் என்றும்(1), மழையே தாகத்தை தீர்க்கவும், உணவாகவும்(2), மழை இல்லையேல், உலகமெங்கும் நீர்நிலையால் அமைந்திருந்தாலும் - பசியை தாங்க முடியாத(3) ஆகிய அடிப்படை தத்துவங்களை தொடராக மனதில் நிறுத்தலாம்.
இரண்டாம் துளி ... உணவுக்கு அடிப்படையான விவசாயத்திற்கு மழை எவ்வளவு இன்றியமையாதது என்பதை அடுத்த 3 பாக்கள் சொல்கின்றன.
பாடி மனனம் செய்யும்போது அநேக குறட்களில் உள்ள எதுகை-மோனை (rhyme ) அமைப்பை உணர்ந்தால் மனனம் இன்னும் எளிதாகிறது !.
உதாரணமாக விசும்பின் என்று முதல் அடியில் வந்தால் அடுத்த அடியில் பசும்புல் என்று அமைந்திருப்பதை பார்க்கிறோம். இது மோனை அமைப்பு.
இத்தோடு இன்னொரு அமைப்பையும் அனைத்து குறட்பாக்களிலும் காணலாம். அதுதான் செப்பலோசை . செப்பல் - பேசுதல்-உரையாடல் . அதாவது இருவருக்கும் நடக்கும் உரையாடல்(dialog) போன்றே அனைத்து குறள்களும் அமைந்திருப்பது ஆராய்ச்சிக்குரியது. விசும்பின் துளிவீழின் அல்லால் ? என்று ஒருவர் கேட்பது போலவும் அதற்கு இன்னொருவர் 'மற்றாங்கே பசும்புல் தலை காண்பது அரிது' என்று பதில் சொல்வது போலவும் அமைந்திருப்பது செப்பலோசை.
மூன்றாம் மழைத் துளி .. வாழ்வின் உயர்ந்த நெறிகளோடு உள்ள மழையின் தொடர்பையும் காட்டுகிறது . நீர் நிலைகளின் சுழற்சியின் முக்கியத்துவத்தையும்(7) , பூசனை, தானம் , தவம், ஒழுக்கம் என்று நாம் முக்கியமாக கருதும் அனைத்தும் மழையை சார்ந்தே உள்ளன(8,9, 10 ) .
இதில் பத்தாவது குறளின் முடிவாக வரும் 'ஒழுக்கு' அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையின் முதல் குறளில் ஆரம்பமாகவும் அமைவதை காண்கிறோம் .
நான் பள்ளியில் படிக்கும்போது திருக்குறள் உரையென் பரிமேலழகர், மு.வரதராசனார் ஆகியவற்றை பரவலாக புழங்கியுள்ளோம். ஆனால் சமீபத்தில்தான் தேவநேயப் பாவாணர் எழுதிய உரையை பற்றி கேள்விபட்டு சென்னை சென்றபோது ஹிக்கிம்போதத்தில் 'திருக்குறள் - தமிழ் மரபுரை' வாங்கி வந்தேன்(ஸ்ரீ இந்து பதிப்பகம், 40 உஸ்மான் சாலை, தியாராய நகர், சென்னை - 600 017 ) . இந்த உரையில் தான் அதிகாரங்களின் தொடர்புகளை தெளிவாக எழுதியுள்ளார். உதாரணமாக ஏன் 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் 'வான் சிறப்பு' க்கு பின் திருவள்ளுவர் அமைத்துள்ளார் என்பதை பாவாணர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்..
" இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழைபெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப் பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந்துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத்துறந்த முழுமுனிவரின் பெருமை கூறுவதால் "
இப்படி அதிகார தொடர்புகளையும், ஒவ்வொரு அதிகாரத்துள்ளே அமைந்துள்ள இணைப்புகளை கண்டுகொண்டாலே மனன பயிற்சி எளிதாகிறது.. வாழ்க்கையின் உண்மைகளும் தெளிகிறது.
Wednesday, July 20, 2005
Wednesday, July 13, 2005
கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்களில் உள்ள பொதுவான அமைப்புகளை இங்கே பார்ப்போம்...
ஒவ்வொரு மனிதனும் கடவுள் நிலையை அடைய முடியும் . இறைவன் நம்மில் இருக்கின்றான் , நம் அன்றாட வாழ்வில் அவனை காண முடியும் .
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்
'கற்றதனால் ஆய பயனென்' என்று நமது 'இயல்பு' நிலையை சொல்லி - இறைவனின் தாளை(திருவடி) வணங்கினால் வால் அறிவனை அடையலாம் என்ற மேன்மை நிலையை சொல்கிறார். வாலறிவன் என்பது infinite intelligence என்று கொள்ளலாம். நாம் கற்பது அளவுடையது. அது நமது இயற்கை. ஆனால் இறையின் பண்பு - வால் அறிவு . அளவுடைய அறிவில் இருந்து வால் அறிவிற்கு நாம் செல்ல அவன் திருவடியை பணிந்தால் போதும்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
நன்மை- தீமை , இன்பம்- துன்பம் என்று எதிர்மைகளை கொண்டதே நம் வாழ்க்கை. இறைவனின் பொருள்(மெய்ப்பொருள்) மேன்மையானது. நம்முடைய ஒவ்வொரு செயலும்(புகழ் புரிதல்) மெய்ப்பொருளை சார்ந்து அமைந்தால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மை பாதிக்காது.
இருள்சேர் இருவினை - நம் வாழ்வின் 'இயல்பு'
இறைவன் பொருள் - மெய்ப்பொருள் - இறையில் பண்பு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல் - நம்மை இவ்வாழ்வின் 'இயல்பிலிருந்து' விடுவித்து இறையில் பண்பை நம்மிடம் வளர்க்கும்.
இதுபோல மற்ற 8 குறள்களையும் பாருங்கள். மூன்று பகுதிகளாக அவற்றையும் பிரித்து பாருங்கள். சிகப்பு பகுதி - நம் இயல்பு நிலை , நீலம் - இறையின் பண்பு , பச்சை - சிகப்பிலிருந்து நீலத்தை அடைய நம் பணி .
இவ்வழியில் கடவுள் வாழ்த்தின் 10 குறட்பாக்களையும் மனனம் செய்யலாம் அல்லவா ? மறந்து விடாதீர்கள் ... ஒலி ஒளி அமைப்பில் படக்கதையாக மனதில் பதிய வைக்கவேண்டும்.
அடுத்தது... வான் சிறப்பு
ஒவ்வொரு மனிதனும் கடவுள் நிலையை அடைய முடியும் . இறைவன் நம்மில் இருக்கின்றான் , நம் அன்றாட வாழ்வில் அவனை காண முடியும் .
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்
'கற்றதனால் ஆய பயனென்' என்று நமது 'இயல்பு' நிலையை சொல்லி - இறைவனின் தாளை(திருவடி) வணங்கினால் வால் அறிவனை அடையலாம் என்ற மேன்மை நிலையை சொல்கிறார். வாலறிவன் என்பது infinite intelligence என்று கொள்ளலாம். நாம் கற்பது அளவுடையது. அது நமது இயற்கை. ஆனால் இறையின் பண்பு - வால் அறிவு . அளவுடைய அறிவில் இருந்து வால் அறிவிற்கு நாம் செல்ல அவன் திருவடியை பணிந்தால் போதும்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
நன்மை- தீமை , இன்பம்- துன்பம் என்று எதிர்மைகளை கொண்டதே நம் வாழ்க்கை. இறைவனின் பொருள்(மெய்ப்பொருள்) மேன்மையானது. நம்முடைய ஒவ்வொரு செயலும்(புகழ் புரிதல்) மெய்ப்பொருளை சார்ந்து அமைந்தால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மை பாதிக்காது.
இருள்சேர் இருவினை - நம் வாழ்வின் 'இயல்பு'
இறைவன் பொருள் - மெய்ப்பொருள் - இறையில் பண்பு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல் - நம்மை இவ்வாழ்வின் 'இயல்பிலிருந்து' விடுவித்து இறையில் பண்பை நம்மிடம் வளர்க்கும்.
இதுபோல மற்ற 8 குறள்களையும் பாருங்கள். மூன்று பகுதிகளாக அவற்றையும் பிரித்து பாருங்கள். சிகப்பு பகுதி - நம் இயல்பு நிலை , நீலம் - இறையின் பண்பு , பச்சை - சிகப்பிலிருந்து நீலத்தை அடைய நம் பணி .
இவ்வழியில் கடவுள் வாழ்த்தின் 10 குறட்பாக்களையும் மனனம் செய்யலாம் அல்லவா ? மறந்து விடாதீர்கள் ... ஒலி ஒளி அமைப்பில் படக்கதையாக மனதில் பதிய வைக்கவேண்டும்.
அடுத்தது... வான் சிறப்பு
Sunday, July 10, 2005
திருக்குறள் மாநாடு ... தொடர்ச்சி இதோ..
நேற்று ( ஜூலை 9) மாநாட்டில் பெண் பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையே என்று யோசனையில் இருந்தேன். ஆனால் இன்று மூன்று பெண்கள் மிக சிறப்பான கருத்துக்களை சுவையாக பாடினார்கள். இதில் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி திருக்குறள் சொன்ன 21 தலைகள் என்ற தலைப்பில் அழகான பாட்டுகளை பாடி அனைவரையும் மகிழ்வித்தார் ..
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த மூன்று பெண் படைப்பாளர்களையும் நேற்றே பேசினால் பலரும் பயன் அடைந்திருப்பார்கள் என்பது என் கருத்து.
நேற்று ( ஜூலை 9) மாநாட்டில் பெண் பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையே என்று யோசனையில் இருந்தேன். ஆனால் இன்று மூன்று பெண்கள் மிக சிறப்பான கருத்துக்களை சுவையாக பாடினார்கள். இதில் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி திருக்குறள் சொன்ன 21 தலைகள் என்ற தலைப்பில் அழகான பாட்டுகளை பாடி அனைவரையும் மகிழ்வித்தார் ..
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த மூன்று பெண் படைப்பாளர்களையும் நேற்றே பேசினால் பலரும் பயன் அடைந்திருப்பார்கள் என்பது என் கருத்து.
திருக்குறள் மாநாடு...
இடம் : வாசிங்க்டன் பெருநகர், அமெரிக்கா
நாள் : சூலை 8,9,10
நடைபெற்றது.
http://www.thirukkural2005.org
நானும் சென்றிருந்தேன். சுமார் 250 பேர் பங்குகொண்ட இம்மாநாட்டில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனக்கு பிடித்தவை:
- முனைவர் வா.செ.குழந்தைசாமி
- முனைவர். எஸ்.வி.சண்முகம்
- முனைவர். ஜார்ஜ் ஹார்ட்
- ரெக்ஸ் சகாயம் அருள் ( தூக்கு தண்டனை அறவே ஒழிக்க வேண்டும் என்று குறள்வழியில் வாதம் செய்தார் )
- அருளாளர் கெஸ்பர் இராஜ்
மற்றும் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழக மற்றும் அமெரிக்க தமிழ் அறிஞர்களால் படைக்கப் பெற்றன.
2000 ஆண்டுகளுக்கு பிறகும் சிறப்பாக திருக்குறள் ஆயப்படுவது காலம் கடந்து குறள்நெறி வளர்ந்து வருகிறது என்பதை இம்மாநாடு காட்டுகிறது.
மாநாட்டின் கலைநிகழ்ச்சியாக 'திருக்குறள் பரதம்' திரு தனஞ்சயன் குழுவினரால் வழங்குப்பட்டது. தரமான நினைவு கொள்ளும் கலைநிகழ்ச்சி.
சுமார் 30 குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றை அடிப்படையாக அமைத்திருந்தனர்.
மாநாட்டில் நிறைய இளைஞர்கள் காண முடிந்தது மகிழ்ச்சி தரும் செய்தி.
வளர்க இதுபோன்ற மாநாடுகள் !
இடம் : வாசிங்க்டன் பெருநகர், அமெரிக்கா
நாள் : சூலை 8,9,10
நடைபெற்றது.
http://www.thirukkural2005.org
நானும் சென்றிருந்தேன். சுமார் 250 பேர் பங்குகொண்ட இம்மாநாட்டில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனக்கு பிடித்தவை:
- முனைவர் வா.செ.குழந்தைசாமி
- முனைவர். எஸ்.வி.சண்முகம்
- முனைவர். ஜார்ஜ் ஹார்ட்
- ரெக்ஸ் சகாயம் அருள் ( தூக்கு தண்டனை அறவே ஒழிக்க வேண்டும் என்று குறள்வழியில் வாதம் செய்தார் )
- அருளாளர் கெஸ்பர் இராஜ்
மற்றும் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழக மற்றும் அமெரிக்க தமிழ் அறிஞர்களால் படைக்கப் பெற்றன.
2000 ஆண்டுகளுக்கு பிறகும் சிறப்பாக திருக்குறள் ஆயப்படுவது காலம் கடந்து குறள்நெறி வளர்ந்து வருகிறது என்பதை இம்மாநாடு காட்டுகிறது.
மாநாட்டின் கலைநிகழ்ச்சியாக 'திருக்குறள் பரதம்' திரு தனஞ்சயன் குழுவினரால் வழங்குப்பட்டது. தரமான நினைவு கொள்ளும் கலைநிகழ்ச்சி.
சுமார் 30 குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றை அடிப்படையாக அமைத்திருந்தனர்.
மாநாட்டில் நிறைய இளைஞர்கள் காண முடிந்தது மகிழ்ச்சி தரும் செய்தி.
வளர்க இதுபோன்ற மாநாடுகள் !
Thursday, June 30, 2005
மனப்பாடம் எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் புரிந்தும், மகிழ்ச்சியுடன் கற்றல். சினிமா பாடல்களை கேட்கும்போது உள்ள துள்ளல் நம் திருக்குறளை பாடும்போது வருமா ? வரும். சுவைத்து இசைக்கும்போது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் டி.கே.எஸ்.கலைவாணர் பாடிய 15 அதிகாரத் தொகுப்பை குருந்தட்டு(சீடி)யில் வாங்கினேன். எவ்வளவு அழகாக பாடியுள்ளார். வாகனத்தில் செல்லும்போது குழந்தைகளுடன் குறட்பாக்களை கூடப்பாடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி!
குறள் அதிகாரங்களின் பெயர்களையும் அதன் எண்களையும் நினைவில் வைத்துக் கொள்வது முதல் படி என்று ஏற்கனவே பார்த்தோம். 133 அதிகாரங்களில்
* முதல் 38 அதிகாரங்கள் - அறம் ( நன்றும் அதை சார்ந்த குணங்களும் )
* அடுத்த 70 அதிகாரங்கள் - பொருள் ( அறம் விளைவிக்கும் பொருளும், புற நெறிகளும் )
* கடைசி 25 அதிகாரங்கள் - காதல் நெறி, இன்பம்
இவை அகத்திலிருந்து புறத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் பாங்கை பார்க்கிறோம். ஒரு பெரிய பாத்திரம் உள்ளது. கீழேயிருந்து மேலே பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ளது - குடுவையை போல. அதில் தண்ணீர் ஊற்றினால் கீழே நிரம்பினால் தானே பிறகு மேலே நிரம்பும். அதுபோல் நம் வாழ்க்கை அறப்பண்புகளை நிறைவாக கடைபிடித்தால் தானே புறத்தில்(நிறுவனத்திலும், சமுதாயத்திலும் ) வெற்றிபெற்றிட முடியும். இந்த கருத்தை போன்றே எழுதபெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகம் Steven Covey - '7 Habits of highly effective people'
http://www.amazon.com/exec/obidos/ASIN/0743272455/102-7999194-0380129
இப்புத்தகத்தில் உட்கருவே inside-out என்பதே !. அதுபோன்று அறம்-பொருள்-இன்பம் குறள் அமைப்பிலும் ஒரு தொடர்ச்சியை காண்பீர்கள் .
சரி... அறத்தின் 38 பாடல்களுக்கும் உள்ள தொடர்ச்சி(pattern ) பார்ப்போம். முதல் 4 அதிகாரங்களில் 3 அதிகாரமான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார்(பெரியோர்) பெருமை ஆகியவை ஒரு கோர்வையாக வரும் . இயற்கையின் மூன்று அடித்தளங்களாக காணலாம். இவற்றை அடித்தளமாக கொண்டு அமைவது 'அறன் வலியுறுத்தல்' .
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். [ 1 : 10 ]
என்று கடவுள் வாழ்த்து முடிவதின் தொடர்ச்சியாக ..
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [ 2 : 1 ]
என்று கடலுக்கும் வானுக்கும் தொடர்ச்சியை ( கற்பனையாக) உருவாக்கலாம்.
அதுபோல் ஒழுக்கு என்று முடியும் வான் சிறப்பு அதிகாரத்தில் இருந்து 3ம் அதிகாரமான 'நீத்தார் பெருமை' க்கு தொடர்பு படுத்த முடியும்.
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. [ 2: 10]
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணுவல் துணிவு. [ 3 : 1 ]
மேலும்,
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயுர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். [ 3 : 10]
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு [ 4 : 1]
இந்த தொடர்ச்சிகளை புரிந்துகொண்டால்
1 - கடவுள் வாழ்த்து
2 - வான் சிறப்பு
3 - நீத்தார் பெருமை
4 - அறன் வலியுறுத்தல்
என்று எண்களோடு அதிகாரங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியுமல்லவா ? இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் , ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களை ஒலி-ஒளி படமாக மனத்திரையில் பிடிக்க வேண்டும்.
படம் 1 : கடவுள் வாழ்த்து : 1 - 10 காட்சிகள்
படம் 2 : வான் சிறப்பு : 1 - 10 காட்சிகள்
என்று இந்த 4 அதிகாரங்களிலும் உங்கள் நேரத்திற்கு ஏற்ப மனப்பாடம் செய்யலாம். இப்போது ஒவ்வொரு அதிகாரத்தினுள்ளே அமைந்துள்ள கோர்வையை கண்டோமானால் இன்னும் எளிதுதானே !.
'கடவுள் வாழ்த்தில்' நான் அறிந்த கோர்வையை அடுத்த இதழில் சொல்வேன் !..
இரண்டு ஆண்டுகளுக்கு முன் டி.கே.எஸ்.கலைவாணர் பாடிய 15 அதிகாரத் தொகுப்பை குருந்தட்டு(சீடி)யில் வாங்கினேன். எவ்வளவு அழகாக பாடியுள்ளார். வாகனத்தில் செல்லும்போது குழந்தைகளுடன் குறட்பாக்களை கூடப்பாடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி!
குறள் அதிகாரங்களின் பெயர்களையும் அதன் எண்களையும் நினைவில் வைத்துக் கொள்வது முதல் படி என்று ஏற்கனவே பார்த்தோம். 133 அதிகாரங்களில்
* முதல் 38 அதிகாரங்கள் - அறம் ( நன்றும் அதை சார்ந்த குணங்களும் )
* அடுத்த 70 அதிகாரங்கள் - பொருள் ( அறம் விளைவிக்கும் பொருளும், புற நெறிகளும் )
* கடைசி 25 அதிகாரங்கள் - காதல் நெறி, இன்பம்
இவை அகத்திலிருந்து புறத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் பாங்கை பார்க்கிறோம். ஒரு பெரிய பாத்திரம் உள்ளது. கீழேயிருந்து மேலே பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ளது - குடுவையை போல. அதில் தண்ணீர் ஊற்றினால் கீழே நிரம்பினால் தானே பிறகு மேலே நிரம்பும். அதுபோல் நம் வாழ்க்கை அறப்பண்புகளை நிறைவாக கடைபிடித்தால் தானே புறத்தில்(நிறுவனத்திலும், சமுதாயத்திலும் ) வெற்றிபெற்றிட முடியும். இந்த கருத்தை போன்றே எழுதபெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு புத்தகம் Steven Covey - '7 Habits of highly effective people'
http://www.amazon.com/exec/obidos/ASIN/0743272455/102-7999194-0380129
இப்புத்தகத்தில் உட்கருவே inside-out என்பதே !. அதுபோன்று அறம்-பொருள்-இன்பம் குறள் அமைப்பிலும் ஒரு தொடர்ச்சியை காண்பீர்கள் .
சரி... அறத்தின் 38 பாடல்களுக்கும் உள்ள தொடர்ச்சி(pattern ) பார்ப்போம். முதல் 4 அதிகாரங்களில் 3 அதிகாரமான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார்(பெரியோர்) பெருமை ஆகியவை ஒரு கோர்வையாக வரும் . இயற்கையின் மூன்று அடித்தளங்களாக காணலாம். இவற்றை அடித்தளமாக கொண்டு அமைவது 'அறன் வலியுறுத்தல்' .
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். [ 1 : 10 ]
என்று கடவுள் வாழ்த்து முடிவதின் தொடர்ச்சியாக ..
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [ 2 : 1 ]
என்று கடலுக்கும் வானுக்கும் தொடர்ச்சியை ( கற்பனையாக) உருவாக்கலாம்.
அதுபோல் ஒழுக்கு என்று முடியும் வான் சிறப்பு அதிகாரத்தில் இருந்து 3ம் அதிகாரமான 'நீத்தார் பெருமை' க்கு தொடர்பு படுத்த முடியும்.
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. [ 2: 10]
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணுவல் துணிவு. [ 3 : 1 ]
மேலும்,
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயுர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். [ 3 : 10]
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு [ 4 : 1]
இந்த தொடர்ச்சிகளை புரிந்துகொண்டால்
1 - கடவுள் வாழ்த்து
2 - வான் சிறப்பு
3 - நீத்தார் பெருமை
4 - அறன் வலியுறுத்தல்
என்று எண்களோடு அதிகாரங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியுமல்லவா ? இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் , ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களை ஒலி-ஒளி படமாக மனத்திரையில் பிடிக்க வேண்டும்.
படம் 1 : கடவுள் வாழ்த்து : 1 - 10 காட்சிகள்
படம் 2 : வான் சிறப்பு : 1 - 10 காட்சிகள்
என்று இந்த 4 அதிகாரங்களிலும் உங்கள் நேரத்திற்கு ஏற்ப மனப்பாடம் செய்யலாம். இப்போது ஒவ்வொரு அதிகாரத்தினுள்ளே அமைந்துள்ள கோர்வையை கண்டோமானால் இன்னும் எளிதுதானே !.
'கடவுள் வாழ்த்தில்' நான் அறிந்த கோர்வையை அடுத்த இதழில் சொல்வேன் !..
Tuesday, June 21, 2005
வணக்கம். திருக்குறள் தமிழ் மறை. பல மொழிகளில் பெயர்த்தாயிற்று. பற்பல உரைகளும் உண்டு.
நாம் பள்ளியில் சுமார் 100 - 150 குறள்கள் படித்திருப்போம். அதில் பலவற்றை மறந்திருப்போம். திருக்குறள் மூலம் எப்படி உங்களை கற்பனைத் திறனையும், நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்வது என்பதை இத்தொடரில் காண்போமா ? மேலும் எப்படி அனைத்து அதிகாரங்களும் அதன் குறள்களும் எப்படி தொடர்புடையதாய் அமைந்துள்ளது என்பதையும் அடியேன் கூற முயற்சிக்கிறேன்..
வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் அனைவரிடத்தும் பொதுவாக உள்ள இரண்டு குணங்கள் உண்டென்றால் அவை நினைவாற்றலும் கற்பனைத் திறனுமாகும். இந்த இரு திறன்களையும் திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறையும்.
நினைவாற்றலையும் கற்பனைத் திறனையும் வளர்க்க திருக்குறளை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் இதோ:
(1) 1330 குறள்களும் பத்தின்(10) தொகுப்பாக இருப்பது. மேலும் 133 அதிகாரகங்களும் ஒன்றோடு அன்று தொடர்புடையது.
(2) இரண்டு அடியில் சுருக்கமான அமைப்பு
(3) எல்லா நாட்டினருக்கும், எம்மதத்தினரும் பொதுவானது
(4) அன்றாட வாழ்வின் வழிகாட்டி .
மேலும் இம்முறைய ஆர்வமுள்ள எவரும் ( தமிழ் தெரியாதவர்களும்தான்) கற்றுக் கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாமா ?
முதல் அதிகாரத்தில் ஆரம்பித்து கடைசி அதிகாரம் வரை வாரம் ஒன்றாக 10 குறள்களை மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக 10 வது அதிகாரம்( இனியவை கூறல்) மனப்பாடம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 10 - இனியவை கூறல் என்ற தொடரை ஒரு உயிரோட்டம் உள்ள படமாக கற்பனை செய்ய வேண்டும். என்னுடைய கற்பனை : காய்களும் கனிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய மரம் . அம்மரத்தின் கீழ் ஒரு சான்றோர் மக்களிடம் இனிய நகைச்சுவையோடு உரையாற்றுகிறார். இன்னொரு பெரியவர் அந்த கூட்டத்தினரிடையே பொருட்களை வாரி வழங்குகிறார். அக்கூட்டத்தில் இருந்து சற்றுவிலகி மூன்றாமவர் கடுஞ்சொல் சொல்கிறார். இந்த கற்பனை முழுவதும் ஒலி-ஒளி வடிவான குறும்படமாக(திருக்குறள் குறும்படம் 10) அமைந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிதல்லவா ?
இப்போது இந்த 10 வது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளையும் 91 - 100 என்று வரிசைப்படுத்தாமல் , 1 முதல் 10 வரை உள்ள எண்களாக மனப்பாடம் செய்யவேண்டும். உதாரணமாக 3ம் பாடலை மனப்பாடம் செய்ய..
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன் சொலினிதே அறம்.
என்ற குறளை மேலே சொன்ன குறும்படம் 10 இல் வரும் மூன்றாம் காட்சியாக அமைக்க வேண்டும். நான் அமைத்த காட்சி பேசும் அப்பெரியவரின் முகத்தை கவனிக்கிறோம். நிலாவின் குளிர்ச்சியுடன் ஒளிவீசுவதாக( மனோவியலார் 'Presence ' என்று இதை சொல்கிறார்கள் ) அமைந்துள்ளது. பேசும் போது கூட்டத்தின் ஒவ்வொருவரின் கண்களை இனிது நோக்குகிறார். அவர் பேசவில்லை. அவரின் மனம் பேசுகிறது. அவர் பேச்சை நன்று(அறமென) என்று கூட்டம் ஆமோதிக்கிறது.
இந்த 3ம் காட்சிக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள காட்சிகள் தொடர்புள்ளதாகவும் - நல்ல திரைப்படம் போல அமைய வேண்டும். இப்படி இந்த அதிகாரத்தில் 1 - 10 பாடல்களை அந்தந்த காட்சி மனதில் ஒட 5 முறை பாடினால் போதும் . " பாட்டா ? எனக்கு பாடத் தெரியாதே ! " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
திருக்குறள் உள்ளிட்ட அனைத்து தமிழ்ப் பாக்களும் பாடும் முறையில்தான் இயற்றியுள்ளார்கள். திருக்குறள் செப்பலோசையில் அமைந்த வெண்பா. தற்போது இராகம் என்றழைக்கப் படும் பண்டைய இசை அமைப்புக்கள் ( பண்கள் ? ) ஒவ்வொரு பாடலுக்கும் உண்டு. அவை என்ன என்பதை நாம் தொலைத்துவிட்டோம் . அவ்வளவே. இயல் வேறு இசை வேறா ???
இப்படி ஒலி - ஒளி அமைப்பில் பொருள் பொதிந்த கற்பனை காட்சியுடன் பாடலாக பாடி பழகினால் ஒரு வாரத்தில் ( நமது பணிகளின் இடையே) எளிதாக ஒரு அதிகாரத்தில் உள்ள 10 பாடல்களை மனனம் செய்யமுடியும் . 2004 ஆண்டு இறுதியில் இருந்து இந்த முறையில் 16 அதிகாரங்களை ( 160 குறள்கள் ) மனப்பாடம் செய்து வந்துள்ளேன்.
136 வது திருக்குறள் என்ன ? என்று நீங்கள் கேட்டால் என் மனம் 14வது குறும்படத்தை தேடும் . 1-2 நொடிகளில் 'ஒழுக்கமுடைமை' என்ற அந்த படம் ஓடத் தயாராகும். அப்படத்தில் 6வது காட்சி என்ன ? 2-3 நொடிகளில்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து .
என்று பாட முடியும். இப்படி சுமார் 5 நொடிகளில் எண்ணை சொன்னால் அந்த குறளையோ அல்லது குறளை சொன்னால் அந்த எண்ணையோ என்னால் கூறமுடியுமென்றால் உங்களாலும் முடியும் அன்றோ ?
மீண்டும் சந்திப்போம் ...
நாம் பள்ளியில் சுமார் 100 - 150 குறள்கள் படித்திருப்போம். அதில் பலவற்றை மறந்திருப்போம். திருக்குறள் மூலம் எப்படி உங்களை கற்பனைத் திறனையும், நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்வது என்பதை இத்தொடரில் காண்போமா ? மேலும் எப்படி அனைத்து அதிகாரங்களும் அதன் குறள்களும் எப்படி தொடர்புடையதாய் அமைந்துள்ளது என்பதையும் அடியேன் கூற முயற்சிக்கிறேன்..
வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் அனைவரிடத்தும் பொதுவாக உள்ள இரண்டு குணங்கள் உண்டென்றால் அவை நினைவாற்றலும் கற்பனைத் திறனுமாகும். இந்த இரு திறன்களையும் திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறையும்.
நினைவாற்றலையும் கற்பனைத் திறனையும் வளர்க்க திருக்குறளை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் இதோ:
(1) 1330 குறள்களும் பத்தின்(10) தொகுப்பாக இருப்பது. மேலும் 133 அதிகாரகங்களும் ஒன்றோடு அன்று தொடர்புடையது.
(2) இரண்டு அடியில் சுருக்கமான அமைப்பு
(3) எல்லா நாட்டினருக்கும், எம்மதத்தினரும் பொதுவானது
(4) அன்றாட வாழ்வின் வழிகாட்டி .
மேலும் இம்முறைய ஆர்வமுள்ள எவரும் ( தமிழ் தெரியாதவர்களும்தான்) கற்றுக் கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாமா ?
முதல் அதிகாரத்தில் ஆரம்பித்து கடைசி அதிகாரம் வரை வாரம் ஒன்றாக 10 குறள்களை மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக 10 வது அதிகாரம்( இனியவை கூறல்) மனப்பாடம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 10 - இனியவை கூறல் என்ற தொடரை ஒரு உயிரோட்டம் உள்ள படமாக கற்பனை செய்ய வேண்டும். என்னுடைய கற்பனை : காய்களும் கனிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய மரம் . அம்மரத்தின் கீழ் ஒரு சான்றோர் மக்களிடம் இனிய நகைச்சுவையோடு உரையாற்றுகிறார். இன்னொரு பெரியவர் அந்த கூட்டத்தினரிடையே பொருட்களை வாரி வழங்குகிறார். அக்கூட்டத்தில் இருந்து சற்றுவிலகி மூன்றாமவர் கடுஞ்சொல் சொல்கிறார். இந்த கற்பனை முழுவதும் ஒலி-ஒளி வடிவான குறும்படமாக(திருக்குறள் குறும்படம் 10) அமைந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிதல்லவா ?
இப்போது இந்த 10 வது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளையும் 91 - 100 என்று வரிசைப்படுத்தாமல் , 1 முதல் 10 வரை உள்ள எண்களாக மனப்பாடம் செய்யவேண்டும். உதாரணமாக 3ம் பாடலை மனப்பாடம் செய்ய..
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன் சொலினிதே அறம்.
என்ற குறளை மேலே சொன்ன குறும்படம் 10 இல் வரும் மூன்றாம் காட்சியாக அமைக்க வேண்டும். நான் அமைத்த காட்சி பேசும் அப்பெரியவரின் முகத்தை கவனிக்கிறோம். நிலாவின் குளிர்ச்சியுடன் ஒளிவீசுவதாக( மனோவியலார் 'Presence ' என்று இதை சொல்கிறார்கள் ) அமைந்துள்ளது. பேசும் போது கூட்டத்தின் ஒவ்வொருவரின் கண்களை இனிது நோக்குகிறார். அவர் பேசவில்லை. அவரின் மனம் பேசுகிறது. அவர் பேச்சை நன்று(அறமென) என்று கூட்டம் ஆமோதிக்கிறது.
இந்த 3ம் காட்சிக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள காட்சிகள் தொடர்புள்ளதாகவும் - நல்ல திரைப்படம் போல அமைய வேண்டும். இப்படி இந்த அதிகாரத்தில் 1 - 10 பாடல்களை அந்தந்த காட்சி மனதில் ஒட 5 முறை பாடினால் போதும் . " பாட்டா ? எனக்கு பாடத் தெரியாதே ! " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
திருக்குறள் உள்ளிட்ட அனைத்து தமிழ்ப் பாக்களும் பாடும் முறையில்தான் இயற்றியுள்ளார்கள். திருக்குறள் செப்பலோசையில் அமைந்த வெண்பா. தற்போது இராகம் என்றழைக்கப் படும் பண்டைய இசை அமைப்புக்கள் ( பண்கள் ? ) ஒவ்வொரு பாடலுக்கும் உண்டு. அவை என்ன என்பதை நாம் தொலைத்துவிட்டோம் . அவ்வளவே. இயல் வேறு இசை வேறா ???
இப்படி ஒலி - ஒளி அமைப்பில் பொருள் பொதிந்த கற்பனை காட்சியுடன் பாடலாக பாடி பழகினால் ஒரு வாரத்தில் ( நமது பணிகளின் இடையே) எளிதாக ஒரு அதிகாரத்தில் உள்ள 10 பாடல்களை மனனம் செய்யமுடியும் . 2004 ஆண்டு இறுதியில் இருந்து இந்த முறையில் 16 அதிகாரங்களை ( 160 குறள்கள் ) மனப்பாடம் செய்து வந்துள்ளேன்.
136 வது திருக்குறள் என்ன ? என்று நீங்கள் கேட்டால் என் மனம் 14வது குறும்படத்தை தேடும் . 1-2 நொடிகளில் 'ஒழுக்கமுடைமை' என்ற அந்த படம் ஓடத் தயாராகும். அப்படத்தில் 6வது காட்சி என்ன ? 2-3 நொடிகளில்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து .
என்று பாட முடியும். இப்படி சுமார் 5 நொடிகளில் எண்ணை சொன்னால் அந்த குறளையோ அல்லது குறளை சொன்னால் அந்த எண்ணையோ என்னால் கூறமுடியுமென்றால் உங்களாலும் முடியும் அன்றோ ?
மீண்டும் சந்திப்போம் ...
Subscribe to:
Posts (Atom)