Thursday, August 25, 2005

அறன் எனப்பட்டது...

கயல்விழி உயர்கல்வி பெற்ற பெண். தனது அறிவுத்திறனால் நிறைய பொருட்செல்வமும் பெற்றார். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தேடும்போது அந்த ஊரில் இருந்த பெரியவரை( நீத்தார் பெருமை - அதிகாரம் 3 - அதிகாரத்தை அறன் அதிகாரத்தோடு இணைக்க ) தன் கணவருடன் பார்க்க சென்றார். இருவரும் அப்பெரியவரை வணங்கி "அய்யா, முன்னோர் பயனால் நாங்கள் வேண்டும் பொருள் சேர்த்துள்ளோம். இதை வறியவர்களுக்கு பயன்படுத்த ஆவல். ஆதலால் அறக்கட்டளை தொடங்கிட உங்கள் ஆசி வேண்டுகிறோம்" என்றனர்.

அப்பெரியவர் அவர்களை ஆசிர்வதித்து "அளவில்லா இன்பம் நிறையட்டும். அறக்கட்டளை எளியோருக்கும் வறியோருக்கும் உதவட்டும். ஆனால் நீங்கள் நினைப்பது போல் உதவுவது மட்டுமல்ல அறம் ! " என்றார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம்
ஆகுல நீர பிற (4 : 3)

"மனமே ஊற்று. தூய்மையான மனத்தில் எழும் எல்லாம் அறமே. மற்றெல்லாம் அறம் அல்ல. மனதில் அழுக்குடன் எவ்வளவு நன்மை செய்தாலும் அவை அறம் அல்ல" என்றார் அப்பெரியவர்.

மேலும் அந்த பெரியவர் "அறச்சக்கரம் என்று ஒன்றுள்ளது . அச்சக்கரத்தின் கம்பிகள் நான்கு அவை
(1) அழுக்காறாமை
(2) பிறன் பொருளின் மீது ஆசையின்மை
(3) கோபம் இல்லாமை
(4) இனிய சொல்

அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் [ 4 : 5 ]

அறச்சக்கரம் வெற்றிகரமாக சுற்ற இந்த நான்கும் அமைய வேண்டும் .

புகழும் செல்வமும் எப்படி அடைவது ? என்பதுதான் நிறையபேர் கேட்கும் கேள்வி ? அதை பற்றி சொல்கிறேன்.......