Tuesday, January 10, 2006

நாம் அஞ்சும் இரண்டு..

நம்மில் பலருக்கு உள்ள பயங்களில் தலையானது மரணம். அடுத்தது 'இப்போது உள்ள நிலையில் இருந்து கெட்டுவிட கூடாது' என்ற அச்சம். செல்வந்தாராக உள்ளவர் தான் ஏழையாகிட கூடாதே என்ற பயம். அதிகாரம் உள்ளவர்களுக்கு அது போய்விடுமோ என்று பயம்.

ஆனால் இவ்வுலகில் வறியோர்க்கு கொடுத்து கொடுத்து, அறவாழ்க்கை வாழும் மக்களுக்கு இந்த இரண்டு அச்சங்களும் இருக்காது.

நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [ புகழ் 24 : 5 ]

வாழ்க்கையில் கேடு வரும்போது அதை தாங்கிட ஒரு மெத்தை உண்டென்று கற்பனை செய்துபாருங்கள். மேலும் 'என்றும் வாழ்கிறோம்' என்ற எண்ணம் இருந்தால் மரண பயமும் போகும் அல்லவா ? இவ்விரண்டும் புகழ்புரிந்த வித்தகர்க்கு மட்டுமே முடியும்.

வித்தகர் - ஈகை செயற்களால் புகழுக்கு வித்திட்டவர் .
நத்தம் - நத்தை போன்ற மெத்தை - குஷன்
சாக்காடு - இறப்பு.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்