Wednesday, July 13, 2005

கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்களில் உள்ள பொதுவான அமைப்புகளை இங்கே பார்ப்போம்...

ஒவ்வொரு மனிதனும் கடவுள் நிலையை அடைய முடியும் . இறைவன் நம்மில் இருக்கின்றான் , நம் அன்றாட வாழ்வில் அவனை காண முடியும் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்

'கற்றதனால் ஆய பயனென்' என்று நமது 'இயல்பு' நிலையை சொல்லி - இறைவனின் தாளை(திருவடி) வணங்கினால் வால் அறிவனை அடையலாம் என்ற மேன்மை நிலையை சொல்கிறார். வாலறிவன் என்பது infinite intelligence என்று கொள்ளலாம். நாம் கற்பது அளவுடையது. அது நமது இயற்கை. ஆனால் இறையின் பண்பு - வால் அறிவு . அளவுடைய அறிவில் இருந்து வால் அறிவிற்கு நாம் செல்ல அவன் திருவடியை பணிந்தால் போதும்.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

நன்மை- தீமை , இன்பம்- துன்பம் என்று எதிர்மைகளை கொண்டதே நம் வாழ்க்கை. இறைவனின் பொருள்(மெய்ப்பொருள்) மேன்மையானது. நம்முடைய ஒவ்வொரு செயலும்(புகழ் புரிதல்) மெய்ப்பொருளை சார்ந்து அமைந்தால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மை பாதிக்காது.
இருள்சேர் இருவினை - நம் வாழ்வின் 'இயல்பு'
இறைவன் பொருள் - மெய்ப்பொருள் - இறையில் பண்பு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல் - நம்மை இவ்வாழ்வின் 'இயல்பிலிருந்து' விடுவித்து இறையில் பண்பை நம்மிடம் வளர்க்கும்.


இதுபோல மற்ற 8 குறள்களையும் பாருங்கள். மூன்று பகுதிகளாக அவற்றையும் பிரித்து பாருங்கள். சிகப்பு பகுதி - நம் இயல்பு நிலை , நீலம் - இறையின் பண்பு , பச்சை - சிகப்பிலிருந்து நீலத்தை அடைய நம் பணி .


இவ்வழியில் கடவுள் வாழ்த்தின் 10 குறட்பாக்களையும் மனனம் செய்யலாம் அல்லவா ? மறந்து விடாதீர்கள் ... ஒலி ஒளி அமைப்பில் படக்கதையாக மனதில் பதிய வைக்கவேண்டும்.


அடுத்தது... வான் சிறப்பு

Sunday, July 10, 2005

திருக்குறள் மாநாடு ... தொடர்ச்சி இதோ..


நேற்று ( ஜூலை 9) மாநாட்டில் பெண் பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையே என்று யோசனையில் இருந்தேன். ஆனால் இன்று மூன்று பெண்கள் மிக சிறப்பான கருத்துக்களை சுவையாக பாடினார்கள். இதில் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி திருக்குறள் சொன்ன 21 தலைகள் என்ற தலைப்பில் அழகான பாட்டுகளை பாடி அனைவரையும் மகிழ்வித்தார் ..



மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த மூன்று பெண் படைப்பாளர்களையும் நேற்றே பேசினால் பலரும் பயன் அடைந்திருப்பார்கள் என்பது என் கருத்து.
திருக்குறள் மாநாடு...

இடம் : வாசிங்க்டன் பெருநகர், அமெரிக்கா

நாள் : சூலை 8,9,10

நடைபெற்றது.

http://www.thirukkural2005.org

நானும் சென்றிருந்தேன். சுமார் 250 பேர் பங்குகொண்ட இம்மாநாட்டில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனக்கு பிடித்தவை:

- முனைவர் வா.செ.குழந்தைசாமி
- முனைவர். எஸ்.வி.சண்முகம்
- முனைவர். ஜார்ஜ் ஹார்ட்
- ரெக்ஸ் சகாயம் அருள் ( தூக்கு தண்டனை அறவே ஒழிக்க வேண்டும் என்று குறள்வழியில் வாதம் செய்தார் )
- அருளாளர் கெஸ்பர் இராஜ்

மற்றும் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழக மற்றும் அமெரிக்க தமிழ் அறிஞர்களால் படைக்கப் பெற்றன.

2000 ஆண்டுகளுக்கு பிறகும் சிறப்பாக திருக்குறள் ஆயப்படுவது காலம் கடந்து குறள்நெறி வளர்ந்து வருகிறது என்பதை இம்மாநாடு காட்டுகிறது.

மாநாட்டின் கலைநிகழ்ச்சியாக 'திருக்குறள் பரதம்' திரு தனஞ்சயன் குழுவினரால் வழங்குப்பட்டது. தரமான நினைவு கொள்ளும் கலைநிகழ்ச்சி.
சுமார் 30 குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றை அடிப்படையாக அமைத்திருந்தனர்.


மாநாட்டில் நிறைய இளைஞர்கள் காண முடிந்தது மகிழ்ச்சி தரும் செய்தி.


வளர்க இதுபோன்ற மாநாடுகள் !