Friday, March 24, 2006

நிலையாமை -3


[குறிப்பு: நிலையாமை பற்றி விளக்க ஆ.கு.அ என்று ஏன் தலைப்பிட்டீர்கள் என்று சிலர் எனக்கு எழுதியிருந்தார்கள். எனக்கு இரண்டும் ஒரே பொருள் கொண்டதாகவே படுகிறது. எனினும் தலைப்பை குழந்தைகளும் படிக்கும்படி மாற்றி அமைத்துள்ளேன்]

அடுத்த நமது நண்பரை கோவிலுக்கு சென்றபோது சந்தித்தேன். அவர் சற்று சோகத்தில் இருந்தார். விசாரித்தேன். “ உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று எனக்கும் ஓரளவு தெரிந்த  ஒருவர் நேற்று மாரடைப்பால் இறந்துபோனதாக வருந்தினார். எனக்கும் அந்த செய்தி துன்பம் தந்தது.
“ அடடா!. போன மாதம் கூட அவரை ஓர் விழாவில் பார்த்தேன். நன்றாக இருந்தாரே. நல்ல மனிதன்”. எனக்கு வியப்பு மேலிட்டது.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு.  [ நிலையாமை 34: 6]

( “நேற்று நன்றாக இருந்தார். ஆனால் இன்றில்லை. “ என்னும் பெருமை உடையது இவ்வுலகம் )

உண்மைதானே?