Thursday, December 29, 2005


பொன்போன்ற மேனி...

எவ்வித அலங்காரமோ அல்லது அணிகலனோ இல்லாமல் சிலர் பொன்போல் ஒளிவிட்டு திகழ்வதை பார்க்கிறோம். உதாரணத்திற்கு இங்குள்ள சில ஞானிகளை பாருங்கள்.
யோகி இராம்சுரத்குமார். அருள்வடிவானவர்.


மனித தொண்டே மகேசன் தொண்டாக கொண்டு வாழ்ந்த அன்னை தெரசா.


பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிய வாழ்வியல், இறை உணர்வு ஊட்டி வரும் வேதத்திரி மகரிஷி அவர்கள்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் - துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு. [ தவம் 27 : 7 ]

பொன்னை சுட்டால் வரும் சுடர்போல், துன்பத்தை நோற்பவர்கள்(தவமிருப்பர்கள்) ஒளிவீசும் தன்மை பெறுவார்கள்.

இத்தகைய நிலையை அடைந்தவர்களை உலகத்தின் உயிர்கள் அனைத்தும் தொழும்.

தன்னுயிர் தான் அறப் பெற்றானை- ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும் [ தவம் 27 : 8 ]

நாம் அனைவரும் உயிர் பெற்றுள்ளோம். ஆனால் அவ்வுயிரை 'முழுமையாக' பெற்றுள்ளோமா என்பது சிந்திக்க வேண்டியது. உயிர் என்றால் என்ன ? அவ்வுயிரை நாம் முழுமையாக பெற சில பயிற்சிகளை மனவளக் கலை மன்றத்தினர் தொகுத்துள்ளனர். அதில் உயிரை நாம் முழுமையாக பெறுவதற்கு உதவுவது காய கல்ப பயிற்சி. ஆர்வமுள்ளோர்

www.vethathiri.org

உலகம் முழுவதும் இம்மன்றத்தின் ஆசிரியர்கள் உள்ளனர்.

அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்



Tuesday, December 27, 2005

கரும வினையை போக்கும் தவம்

கருமம் என்பது பொருள் பொதிந்த அழகியத் தமிழ்ச் சொல். கருவில் இருக்கும் போதே நம் பாதை(விதி) நிர்ணயிக்கப் படுவதால் கருமம் எனப்பட்டது. அதுவே கர்மா(karma) என்று வடமொழி பேசுபவர்களால் மருவி வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு போல இது. நமது முன்பிறவியில்(முன் பிறவியில் நம்பிக்கை இல்லாதோர் முன்னோர்களின் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம்) செய்த செயல்களை விளைவே, இப்பிறவியின் ஆரம்ப கணக்கு(opening balance) எனக் கொள்ளலாம். இப்பிறவியில் நாம் செய்யும் செயல்கள்(அறம்) ஆரம்பக் கணக்கை கூட்டுகிறதா(credit) அல்லது குறைக்கிறதா(debit) என்பது அச்செயல்களின் தண்மையை பொருத்தது. புண்ணியம், பாவம் என்பதெல்லாம் இதற்கு நாம் புழங்குகின்ற சொற்கள்.

நம்மின் பழைய தீயவினைகளின் விளைவுகளை குறைத்து, நல் வினைகளின் பாதையில் நம்மை செலுத்த முடியுமா ? விதியின் பாதையை மாற்ற முடியுமா ?

முடியும் !

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் - மற்றல்லார்
அவம் செய்வார் ஆசை உட்பட்டு. [ தவம் 27 : 6 ]

தவம் செய்வதால்(துன்பம் பொறுத்தல்; உயிர்களுக்கு தீங்கு செய்யாமை - தவம் 27:1) நம் கருமவினைகளை நீக்க முடியும். அப்படி அல்லாமல், புலன்களின் ஆசைக்கு உட்பட்டவர்கள் அவம் செய்பவர்கள்.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்