Wednesday, October 11, 2006

யாதும் ஊரே

பணி நிமித்தமாக நியூ ஆர்க் சென்றிருக்கும் போது நான் தங்கியிருந்த விடுதியில் ஒரிசாவில் இருந்து வந்திருந்த ஒரு இளைஞரை சந்தித்தேன். 2 மாத வேலைக்காக வந்திருந்தார். இதற்கு முன் ஐரோப்பாவில் சில நாடுகளிலும், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலும் வேலை செய்த அனுபவங்களையும் கூறினார். இந்தப் பணி முடிந்தவுடன் சிங்கப்பூர் செல்வதாகவும் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றுமல்லாமல் மருத்துவம், உயர்கல்வி துறைகளிலும் இந்தியர்கள் பலநாடுகளில் பணியாற்றுகிறார்கள். உயர்ந்த கல்வி பெற்றவர்களை பல நாடுகள் 'வருக, வருக' என்று வரவேற்கின்றன.

இப்படிப்பட்ட நிலையை பார்த்தபின்னும், பலர் கற்காமல் இருப்பது ஏன்?

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லா தவாறு. [ கல்வி 40 : 7 ]
எந்த நாடும் தன் நாடாம்; எந்த ஊரும் தன் ஊராம் ; இப்படி இருக்கையில், ஒருவன் சாகும் வரையில் கற்காது இருப்பது ஏன்?


'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் ' கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதும் இதை ஒத்தது அன்றோ?


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்