Thursday, August 18, 2005

உயிரே...

அ முதல் ஔ வரையான எழுத்துக்களை எப்படி தமிழர்கள் உயிர் என்று அழைத்து வந்துள்ளனர் என்று நினைத்து பார்த்தால் வியப்பாக உள்ளது. உலக மொழிகளில் நிறைய சொற்கள் உயிரில் தொடங்கும். உலகின் மூன்று பெரிய மதங்கள் - கிருத்துவம், இசுலாம்,இந்து புனித சொற்களாக கருதும் 'ஆமென்' , 'அல்லா' , 'ஓம்' உயிரில் தொடங்குவது நமது உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது அல்லவா ?

1330 குறள்களில் 479 பாக்கள் உயிர் எழுத்தில் தொடங்குவதாக அமைந்துள்ளது மேற்கூறிய [உயிர் எழுத்துக்களின்] சிறப்பைக் காட்டுகிறது. 'தியானமும் திருக்குறளும்' என்ற தலைப்பில் நமது சொற்களில் உள்ள நெடில் எழுத்துக்கள் எப்படி மனதை ஒருமிகப்படுத்தும் ஆற்றல் உடையன என்பதை பார்த்தோம். அதுபோல் ஒரு சொல்லின் தொடக்கத்தில் உள்ள உயிர் ஒலி சக்தியை கொடுக்கும். உயிரே நெடிலாக(ஆ, ஈ,ஊ,ஏ,ஐ,ஓ ) இருந்தால் ஒலியின் சிறப்பை சொல்லவா வேண்டும் ?