Tuesday, April 01, 2008

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

காலை 6.40
"பாரதி, இறை வாழ்த்து பாடலாம் வாங்க" .

வந்து அமர்ந்தோம்.

பாலும் தெளிதேனும்..
வாக்குண்டாம்..
விழிக்குத் துணை திருமென் மலர் பாதங்கள்...
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்..
திருக்குறள் கேள்வி அதிகாரம் பாட ஆரம்பித்தார் பாரதி.

"கேள்வி என்றால் என்ன?" நான்.
"Question ! " என் மகள்.
" சரி. கேள்வியின் இன்னொரு பொருள் - கேட்டல், Listening, Following Directions" - நான்.

பத்து குறள்களையும் தெளிவாக படித்தார்.

.......
.............
...........................

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் - இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். [ கேள்வி 42 : 7 ]

" கொஞ்சம் நிறுத்துங்க. இன்று உங்களுக்கு தேர்வு. தேர்வின் கேள்விகளை சரியாக புரிந்து கொண்டால், பிழையான பதில்களை சொல்ல மாட்டீர்கள் அல்லவா ?" நான் விளக்கினேன்.
.....
...............
..................

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் ஏன் ? [ கேள்வி 42 : 10] - பாடி முடித்தார் பாரதி.

"மற்றவர்கள் சொல்வதை கேட்காமல், பேச வல்ல மக்கள் விலங்குகள். அவர்கள் மறைந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? " நான்.

" நாமும் மனிதனாகும் முன் விலங்காக தானே இருந்தோம்" - மகள்.

" ஆமாம். ஆனால் இப்போது விலங்காக இருக்கிறோமா? மனிதனாக மாறியிருக்கிறோம் அல்லவா? " - நான்

" டால்பின் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கும். ஆனால் அதற்கு நல்ல நுண்ணறிவு இருக்கிறதே" , எங்கோ படித்ததை நினைவுடன் சொன்னார் பாரதி.

" டால்பினுக்கு நல்ல கேட்கும் சக்தி உள்ளதா? " தொடர்ந்து கேட்டார்.

பதில் தெரியவில்லை. இணையத்தில் தேட வேண்டும்.