Sunday, July 10, 2005

திருக்குறள் மாநாடு...

இடம் : வாசிங்க்டன் பெருநகர், அமெரிக்கா

நாள் : சூலை 8,9,10

நடைபெற்றது.

http://www.thirukkural2005.org

நானும் சென்றிருந்தேன். சுமார் 250 பேர் பங்குகொண்ட இம்மாநாட்டில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனக்கு பிடித்தவை:

- முனைவர் வா.செ.குழந்தைசாமி
- முனைவர். எஸ்.வி.சண்முகம்
- முனைவர். ஜார்ஜ் ஹார்ட்
- ரெக்ஸ் சகாயம் அருள் ( தூக்கு தண்டனை அறவே ஒழிக்க வேண்டும் என்று குறள்வழியில் வாதம் செய்தார் )
- அருளாளர் கெஸ்பர் இராஜ்

மற்றும் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழக மற்றும் அமெரிக்க தமிழ் அறிஞர்களால் படைக்கப் பெற்றன.

2000 ஆண்டுகளுக்கு பிறகும் சிறப்பாக திருக்குறள் ஆயப்படுவது காலம் கடந்து குறள்நெறி வளர்ந்து வருகிறது என்பதை இம்மாநாடு காட்டுகிறது.

மாநாட்டின் கலைநிகழ்ச்சியாக 'திருக்குறள் பரதம்' திரு தனஞ்சயன் குழுவினரால் வழங்குப்பட்டது. தரமான நினைவு கொள்ளும் கலைநிகழ்ச்சி.
சுமார் 30 குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றை அடிப்படையாக அமைத்திருந்தனர்.


மாநாட்டில் நிறைய இளைஞர்கள் காண முடிந்தது மகிழ்ச்சி தரும் செய்தி.


வளர்க இதுபோன்ற மாநாடுகள் !

No comments: