பல மாதங்களுக்கு பிறகு ஒரு நண்பரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன், “ஹி..ஹி.. நேற்று ஒரு ஆடை-குறைப்பு அரங்கத்திற்கு (அதாங்க ஸ்டிரிப் கிளப்.. இனி ஆ.கு.அ என்றே அழைப்போம்) சென்றிருந்தேன். அங்கே $1000 பணம் கண்ணு மண்ணு தெரியாத செலவு செய்து விட்டேங்க. இதைப் பற்றி திருவள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்காரா ? ” என்றார் நொந்து. எப்படி அங்கே கண், மண் போன்றவை அங்கே தெரியும் என்று நொந்து கொண்டு அவரிடம் “ஆமாம். உங்கள் செயலுக்கு மிகவும் பொருத்தமான குறள் ஒன்று உள்ளது” என்றேன்.
கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே – பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்தற்று. [ நிலையாமை 34 : 2 ]
“கூத்தாடுகின்ற அவைக்கு வருகின்றவர்கள் கூடுவதும், பிறகு குறைவது போல , பெருஞ்செல்வம் வரும் போகும். அது நிலையானது அல்ல” என்று திருக்குறள் உரையாசிரியர்கள் கூறுகின்றனர். பெருஞ்செல்வத்தின் நிலையாமையை குறிப்பிடும் போது கூத்தாடுகின்ற அவையை ஏன் கூற வேண்டும்? கோவலனும் நம் நண்பர் போல் , மாதவி கூத்தாடுகின்ற அவைக்கு சென்று நாட்டியத்தில் மயங்கி மாலை ஒன்றை பரிசலிப்பதாக சிலப்பதிகாரத்தில் படிக்கின்றோன். அந்த மயக்கமே அவன் விதியை நிர்ணயிப்பதாக அமைகிறது. இன்றும் அது பொருந்தும் தானே?
நண்பரிடம் தொடர்ந்து கூறினேன். “ இக்குறளை சொல்லும் முன் இன்னொன்றையும் உங்கள் சூழலுக்குப் பொருத்தமாக கூறுகிறார் வள்ளுவர்”
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை. [ நிலையாமை 34:1 ]
நில்லாதவற்றை நிலையானது என்னும் அறிவு கடையானது !. ஆ.கு.அ வில் ஆடும் பெண்களின் அழகும் வனப்பும் நிலையானதா? அப்படி நிலையானது என்று உணர்ந்தால் அது உண்மையான அறிவா?
இப்படி நிலையில்லாத புறப்பண்புகள் கொண்ட செயல்களில் செல்வத்தை செலவழிக்காமல் வேறு என்ன செய்ய வேண்டும்?
அற்கா இயல்பிற்று செல்வம் – அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல். [ நிலையாமை 34 : 3 ]
செல்வம் நிலையற்ற வழிகளில் செலவழித்தால் அழிந்து போகும் தன்மை உள்ளது. ஆதலால் செல்வத்தை பெற்றோம் என்றால் , நல்ல செயல்களில் செலவழிக்க வேண்டும்.
நண்பரும் ஏதோ புரிந்ததுபோல் தலையாட்டினார்.
பேசிக்கொண்டே தேநீர் அருந்த அருகில் உள்ள கடைக்கு சென்றோம்….நிலையில்லாத இன்னொன்றை பற்றிப் பேச.
[ தொடரும்]
Friday, March 10, 2006
Wednesday, March 08, 2006
பகுத்துண்டு...
உணவு நம் வாழ்விற்கு அவசியமான ஒன்று. அவசியம் என்பதால் அளவுக்கு அதிகம் உண்பது எவ்வளவு கெடுதல். மேலும் மற்ற உயிர்களை கொன்று அதனால் ஆகும் இறைச்சியை உண்பதை நாம் தவிர்க்க வேண்டும். பகுத்து உண்டாலே இவ்வுலகத்தின் பட்டினிகளும், வறுமையும் தொலைந்து போகும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. [ கொல்லாமை 33 : 2 ]
திருக்குறளின் பொதுமை நெறிகளில் எனக்கு பிடித்த ஒன்று இக்குறள்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. [ கொல்லாமை 33 : 2 ]
திருக்குறளின் பொதுமை நெறிகளில் எனக்கு பிடித்த ஒன்று இக்குறள்.
Tuesday, March 07, 2006
திருமகளும் அவள் அக்காவும்
ஓர் ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இருவரையும் அவர்களின் தந்தை அழைத்து ஆளுக்கு $10,000 கொடுத்து, ஒரே மாதத்தில் யார் பணத்தை அதிகமாக பெருக்கி வருகிறார்களோ அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றைக் கொடுப்பதாக கூறினார். இரண்டே இரண்டு நிபந்தனைகள் . 1. சூதாட்டம் கூடாது 2. பங்குச் சந்தையில் முதலிட கூடாது.
பத்தாயிரம் பெற்றுக் கொண்ட அண்ணன், உற்சாகமே இல்லாமல், அவனைவிட நிறைய பணமும் வசதியும் உள்ள அவன் நண்பர்களை நினைத்துக் கொண்டான். பொறாமையின் விளைவால் பேராசை கொண்டான். அவனுக்கு தெரிந்தவன் $10,000 கொடுத்தால் ஒரே மாதத்தில் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக ஆசை காட்டினான்.
ஒரு மாதத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் அல்லவா? கொடுத்த பணத்தை அண்ணன் தொலைத்து விட்டான்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் [ அழுக்காறாமை 17 : 7 ]
பொறாமை என்று தீக்கொழுந்தை மனத்தில் கொண்டவனை, செய்யவள்(திருமகள்) தன்னுடைய அக்கா மூதேவிக்கு காட்டி விடுவாள். அழுக்காறு வறுமையில்(மூதேவி – வறுமையின் அடையாளம்) கொண்டு போய் விடும் அன்றோ?
தம்பி தனக்கு கொடுக்கப்பட்ட பத்தாயிரத்தை வைத்து என்ன செய்தான் என்று பார்ப்போம். தம்மிடம் இந்த பணத்தை வைத்து நாலு பேருக்கு நன்மை செய்தால் என்ன என்று யோசித்தான். தன் வீடு தேடி வந்த விருந்தினரின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தான். ஒரு விருந்தினருக்கு வியாபாரம் ஆரம்பிக்க $5,000 தேவைப் பட்டது. அவரை உபசரித்து அவருக்கு தேவைப் பட்ட பணத்தை கொடுத்தனுப்பினான். இன்னொரு நாள் வந்த விருந்தினர் தனது பெண்ணின் கல்விச் செலவிற்கு $ 5,000 தேவை என்றார். இன்முகத்துடன் அப்பணத்தை கொடுத்தனுப்பினான். இரண்டு விருந்தினர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான் இளையவன்.
இரு சகோதரர்களும் தன்னுடைய பணத்தை செலவு செய்துவிட்டனர். கையில் பணம் இல்லை. அப்பாவிடம் வந்தனர். நடந்ததை அறிந்த தந்தை இளையவனை அழைத்து, “ நீ விருந்தினருக்கு முகமலர்ச்சியுடன் உதவி செய்துள்ளாய். ஆதலால் அப்பணம் நல்ல விதைகளைப் போன்றது. தொழிலுக்கு கொடுத்த பணம் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி, உன்னிடம் உதவியை பெற்றவருக்கும், அவரை சார்ந்தோர்க்கும் பயன் தரும். ஒரு பெண்ணின் கல்விக்கு கொடுத்த பணம் பிற்காலத்தில் அப்பெண்ணின் குடும்பத்திலும் சமூகத்திலும் செல்வத்தை பற்பல மடங்கு பெருக்கும். ஆதலால் பணத்தை ஒரே மாதத்தில் பன்மடங்கு பெருக்கிய உனக்கே என் சொத்தின் பெரும்பங்கை தரப்போகிறேன்” என்றார்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். [ விருந்தோம்பல் 9 : 4 ]
முகமலர்ச்சியுடன் விருந்தினரை பார்த்துக் கொள்பவர்களின் வீட்டில், நிரந்தரமாக(உறைதல்) திருமகள்(செல்வத்தின் அடையாளம்) வந்து அமர்ந்துக் கொள்வாள்.
பத்தாயிரம் பெற்றுக் கொண்ட அண்ணன், உற்சாகமே இல்லாமல், அவனைவிட நிறைய பணமும் வசதியும் உள்ள அவன் நண்பர்களை நினைத்துக் கொண்டான். பொறாமையின் விளைவால் பேராசை கொண்டான். அவனுக்கு தெரிந்தவன் $10,000 கொடுத்தால் ஒரே மாதத்தில் இரண்டு மடங்கு பணம் கொடுப்பதாக ஆசை காட்டினான்.
ஒரு மாதத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் அல்லவா? கொடுத்த பணத்தை அண்ணன் தொலைத்து விட்டான்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் [ அழுக்காறாமை 17 : 7 ]
பொறாமை என்று தீக்கொழுந்தை மனத்தில் கொண்டவனை, செய்யவள்(திருமகள்) தன்னுடைய அக்கா மூதேவிக்கு காட்டி விடுவாள். அழுக்காறு வறுமையில்(மூதேவி – வறுமையின் அடையாளம்) கொண்டு போய் விடும் அன்றோ?
தம்பி தனக்கு கொடுக்கப்பட்ட பத்தாயிரத்தை வைத்து என்ன செய்தான் என்று பார்ப்போம். தம்மிடம் இந்த பணத்தை வைத்து நாலு பேருக்கு நன்மை செய்தால் என்ன என்று யோசித்தான். தன் வீடு தேடி வந்த விருந்தினரின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தான். ஒரு விருந்தினருக்கு வியாபாரம் ஆரம்பிக்க $5,000 தேவைப் பட்டது. அவரை உபசரித்து அவருக்கு தேவைப் பட்ட பணத்தை கொடுத்தனுப்பினான். இன்னொரு நாள் வந்த விருந்தினர் தனது பெண்ணின் கல்விச் செலவிற்கு $ 5,000 தேவை என்றார். இன்முகத்துடன் அப்பணத்தை கொடுத்தனுப்பினான். இரண்டு விருந்தினர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான் இளையவன்.
இரு சகோதரர்களும் தன்னுடைய பணத்தை செலவு செய்துவிட்டனர். கையில் பணம் இல்லை. அப்பாவிடம் வந்தனர். நடந்ததை அறிந்த தந்தை இளையவனை அழைத்து, “ நீ விருந்தினருக்கு முகமலர்ச்சியுடன் உதவி செய்துள்ளாய். ஆதலால் அப்பணம் நல்ல விதைகளைப் போன்றது. தொழிலுக்கு கொடுத்த பணம் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி, உன்னிடம் உதவியை பெற்றவருக்கும், அவரை சார்ந்தோர்க்கும் பயன் தரும். ஒரு பெண்ணின் கல்விக்கு கொடுத்த பணம் பிற்காலத்தில் அப்பெண்ணின் குடும்பத்திலும் சமூகத்திலும் செல்வத்தை பற்பல மடங்கு பெருக்கும். ஆதலால் பணத்தை ஒரே மாதத்தில் பன்மடங்கு பெருக்கிய உனக்கே என் சொத்தின் பெரும்பங்கை தரப்போகிறேன்” என்றார்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். [ விருந்தோம்பல் 9 : 4 ]
முகமலர்ச்சியுடன் விருந்தினரை பார்த்துக் கொள்பவர்களின் வீட்டில், நிரந்தரமாக(உறைதல்) திருமகள்(செல்வத்தின் அடையாளம்) வந்து அமர்ந்துக் கொள்வாள்.
Monday, March 06, 2006
சொர்க்கத்தின் கதவுகள் - 8
ஓர் ஊர் வழியே மூன்று துறவிகள் நடந்து சென்றார்கள். மூவரும் ஒரே மடத்தை சேர்ந்தவர்கள். அந்த மூவரையும் அந்த ஊரின் பெரியவர்கள் சந்தித்து வணங்கினார்கள். மாலையிட வேண்டும். யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்ற கேள்வி வந்தது. முதல் துறவி “மடத்தின் தலைவன் நான். செல்வந்தர்களும், பெரிய மனிதர்களும் மணிக்கணக்காக காத்திருந்தே என்னை பார்க்க முடியும். நான் நினைத்தால் முடியாதது இல்லை!” இவ்வாறு தன் பெருமைகளை சொல்ல ஆரம்பித்தார்.
இரண்டாம் துறவி நிறைய நூல்களை கற்றவர். அம்மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர். அவர் “ இந்த மடத்தின் சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் என்னால் உண்டானதே . கடந்த 10 ஆண்டுகளில் மடத்தின் புகழை வளர்க்க என்னவெல்லாம் செய்துள்ளேன்” என்றார். யார் பெரியவர் என்ற விவாதம் பெரிதானது.
வந்த ஊர் பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று ஒரே குழப்பம். மூன்றாம் துறவியை எங்கே காணோம் என்று பார்த்தபோது, சிவனே என்று மரத்தடியில் ஆனந்த உறக்கத்தில் இருந்தார்.
யான், எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். [ துறவு 35: 6]
[செறுக்கு – ஆணவம் ]
யான், எனது என்கின்ற ஆணவத்தை ஒழித்தவர்கள், வானோர்க்கும் கிட்டாத புகழுலத்திற்கு உரியவர்கள்.
இரண்டாம் துறவி நிறைய நூல்களை கற்றவர். அம்மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர். அவர் “ இந்த மடத்தின் சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் என்னால் உண்டானதே . கடந்த 10 ஆண்டுகளில் மடத்தின் புகழை வளர்க்க என்னவெல்லாம் செய்துள்ளேன்” என்றார். யார் பெரியவர் என்ற விவாதம் பெரிதானது.
வந்த ஊர் பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று ஒரே குழப்பம். மூன்றாம் துறவியை எங்கே காணோம் என்று பார்த்தபோது, சிவனே என்று மரத்தடியில் ஆனந்த உறக்கத்தில் இருந்தார்.
யான், எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். [ துறவு 35: 6]
[செறுக்கு – ஆணவம் ]
யான், எனது என்கின்ற ஆணவத்தை ஒழித்தவர்கள், வானோர்க்கும் கிட்டாத புகழுலத்திற்கு உரியவர்கள்.
Subscribe to:
Posts (Atom)