குற்றம் புரியும் ஆளுமை..
14 வயதில் குழந்தைப் பெற்ற பள்ளி மாணவி - 2 ஆண்டுகளாக ஆசிரியர் மாணவியுடன் முறைகேடான உறவு ..
உதவியாளருடன் முறைகேடான உறவு. செனட்டர் குடியரசு தலைவர் தேர்தலில் இருந்து விலகல்...
சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கை . கிருத்துவ பிஷப் மீது ஆதாரங்களோடு குற்றச்சாட்டு !
நடிகையுடன் பிரபல மடத்தின் சாமியார் உல்லாசம்
இப்படிப்பட்ட செய்திகளை நாம் அன்றாடம் படிக்கின்றோம். அரசுப் பொறுப்பாளர்கள், ஆன்மீக குருக்கள், நிறுவன தலைவர்கள் முதல் பள்ளிக் கூட ஆசிரியர்கள் வரை, தன்னுடைய ஆளுமையில் உள்ளவர்கள் மேல் ஒருவித 'மயக்கும் வலிமை' கொள்கிறார்கள். இது ஊக்கமாகவும் வாழ்வில் மேன்மை தரும் வலிமையாக இருந்தால் நலம் பயக்கும்.
ஆனால் அந்த வலிமையே முறைகேடாக வளரும் போது , விளைவுகள் விபரீதமாகும். இதையே கூடா ஒழுக்கமாக வள்ளுவம் எச்சரிக்கிறது.
வலியில் நிலைமையான் வல்லுருவம் , பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று . [ 28 : 3 ]
{ வலிமை இல்லாதவனின் ஆளுமை , பசு(பெற்றம்) புலியின் தோலைப் போர்த்து மேய்வது போலவாகும். }
தவமறைந்து அல்லவை செய்தல் , புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்ந் தற்று. [ 28 : 4 ]
{ ஆளுமை என்ற போர்வையில் மறைந்து தீயவை செய்தல் , புதற்றில் மறைந்து வேடன் , பறவை(புள்)யை பிடிப்பது போன்றதாகும் }
இத்தகைய 'தலைமை' இருக்கத்தான் செய்யும். எப்படி விழிப்புடன் இருப்பது ?
(1) ஒரே நபர் ஆளுமை கொள்ளாமல், அதிகாரப் பகிர்வும்(Balance of power) செயல்பாட்டு கூறுகள் அமைத்தல்(Seggregation of duties ) போன்றவற்றால் ஓரளவு இதை குறைக்கலாம். இது அனைத்துவிதமான அமைப்புகளுக்கும் பொருந்தும்.
(2) தீர்வு நம் கையில் -
கணைகொடிது ; யாழ்கோடு செவ்விது - ஆங்கன்ன
வினைபாடு பாலால் கொளல். [ 28 : 9 ]
வில்(கணை) பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் செயலால் கொடிது ; யாழ் வளைந்து வளைந்து இருந்தாலும் இசை இன்பம் தர வல்லது . அதுபோல் ஆளுமை உள்ளவர்களையும் அவரவர்களின் செயலால் அறிய வேண்டும்.
அவர்களை கண்டு மயக்கமோ, கொண்டாட்டமோ தேவையில்லை !
Saturday, June 26, 2010
Tuesday, January 05, 2010
பொருள்கோள் - 2
இசைத்துப் பாடவும், மனனம் செய்யவும் ஏற்புடையது பாக்கள். குறட்பாவும் அப்படித்தான். அனைத்து குறள்களும் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் உடையன.
உதாரணமாக
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. [ 47 : 7 ]
இதில் இரண்டு வாக்கியங்கள் இருப்பதைப் காண்கிறோம்.
முதல் வாக்கியத்தை அமைக்கலாம். முதலில் பயனிலையைக் காண வேண்டும்.
துணிக(தொடங்கு).
யார் ? எது ? என்ன ? போன்ற கேள்விகளை இந்த பயனிலையைக் கொண்டு கேட்டால் 'எழுவாய்' கிடைக்கும்.
துணிக !
நீ துணிக !
(இங்கு 'நீ' என் தோன்றா எழுவாய் ஆகும்)
'எண்ணி' என்ற அடைமொழியை சேர்த்தால் முதல் வாக்கியத்தை
'நீ எண்ணித் துணிக !' என்று கொள்ளலாம்.
மேலும் 'கருமத்தை' என்ற செயப்படுப் பொருளையும் சேர்த்தால்
நீ கருமத்தை எண்ணித் துணிக ! என்று முழுப் பொருளைக் கொள்ளலாம்.
'துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற அடுத்த வாக்கியம் எளிதானது.
'இழுக்கு' என்பது பயனிலை.
'எது இழுக்கு ?' என்ற கேள்விக்கு விடையாக, 'துணிந்தபின் எண்ணுவம்' என்ற சொற்றொடரே எழுவாயாக அமைந்துள்ளது.
செயப்படுப் பொருள் இல்லை.
பெயர்ச்சொல்லும் சில குறட்களில் பயனிலையாக வரும். உதாரணமாக
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [ வான் சிறப்பு 2 : 5 ]
இக்குறள் ஒரே வாக்கியமாக அமைந்துள்ளது.
' மழை' என்ற பெயர்ச்சொல் பயனிலையாகும்.
எத்தகையது மழை ? என்ற கேள்வியை கேட்டால் வரும் பதில் ('கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதும்' )எழுவாயாகும்.
கடந்த சில மாதங்களாக இத்தகைய பொருள்கோள் முறையில் குறள்களை நேரடியாக படித்துக் கொண்டிருக்கின்றேன். வழக்கில் இல்லாத சில சொற்களை(உதாரணம் : நெடுநீர் - நீண்ட தூக்கம்) மட்டும் அகராதியின் துணைக் கொண்டு பொருள் கொள்ளலாம்.
அது சரி, வழக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் பரவாயில்லை. அகராதி துணை. சில சொற்கள் இன்று வழக்கில் இருக்கும் பொருளை குறிக்காமல், அக்காலப் பொருள் கொண்டிருக்கும்.
நாறா மலர்(நறுமணம் இல்லா மலர்) - 'துர்நாற்றம்' என்ற பொருளில் நாற்றம் இன்று வழங்குகிறோம்.
'சூழ்' - இன்று சூழ்ந்து கொள்ளுதல் ( gather around) என்ற பொருளில் மட்டும் இன்று வழங்குகிறோம். ஆனால் 'சூழ்' என்ற சொல் பல குறட்களில் ' நினை' என்ற பொருளில் வழங்குவதை பார்க்கிறோம்.
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலையஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை. [ கொல்லாமை 33 : 5 ]
[ சூழ்வான் - நினைப்பவன் ]
இதுவாவது பரவாயில்லை. 'புலையர்' என்ற சொல் இன்று சாதி சார்ந்த சொல்லாக வழங்குகிறது. ஆனால் திருக்குறளில் 'புலை வினையர்' என்ற சொல் கீழ்ச் செயலை செய்பவன் என்ற பொருளை குறிப்பதாக மட்டும் அமைந்திருப்பதைக் காணலாம்.
கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. [ கொல்லாமை 33 : 9 ]
இசைத்துப் பாடவும், மனனம் செய்யவும் ஏற்புடையது பாக்கள். குறட்பாவும் அப்படித்தான். அனைத்து குறள்களும் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் உடையன.
உதாரணமாக
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. [ 47 : 7 ]
இதில் இரண்டு வாக்கியங்கள் இருப்பதைப் காண்கிறோம்.
முதல் வாக்கியத்தை அமைக்கலாம். முதலில் பயனிலையைக் காண வேண்டும்.
துணிக(தொடங்கு).
யார் ? எது ? என்ன ? போன்ற கேள்விகளை இந்த பயனிலையைக் கொண்டு கேட்டால் 'எழுவாய்' கிடைக்கும்.
துணிக !
நீ துணிக !
(இங்கு 'நீ' என் தோன்றா எழுவாய் ஆகும்)
'எண்ணி' என்ற அடைமொழியை சேர்த்தால் முதல் வாக்கியத்தை
'நீ எண்ணித் துணிக !' என்று கொள்ளலாம்.
மேலும் 'கருமத்தை' என்ற செயப்படுப் பொருளையும் சேர்த்தால்
நீ கருமத்தை எண்ணித் துணிக ! என்று முழுப் பொருளைக் கொள்ளலாம்.
'துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற அடுத்த வாக்கியம் எளிதானது.
'இழுக்கு' என்பது பயனிலை.
'எது இழுக்கு ?' என்ற கேள்விக்கு விடையாக, 'துணிந்தபின் எண்ணுவம்' என்ற சொற்றொடரே எழுவாயாக அமைந்துள்ளது.
செயப்படுப் பொருள் இல்லை.
பெயர்ச்சொல்லும் சில குறட்களில் பயனிலையாக வரும். உதாரணமாக
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [ வான் சிறப்பு 2 : 5 ]
இக்குறள் ஒரே வாக்கியமாக அமைந்துள்ளது.
' மழை' என்ற பெயர்ச்சொல் பயனிலையாகும்.
எத்தகையது மழை ? என்ற கேள்வியை கேட்டால் வரும் பதில் ('கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதும்' )எழுவாயாகும்.
கடந்த சில மாதங்களாக இத்தகைய பொருள்கோள் முறையில் குறள்களை நேரடியாக படித்துக் கொண்டிருக்கின்றேன். வழக்கில் இல்லாத சில சொற்களை(உதாரணம் : நெடுநீர் - நீண்ட தூக்கம்) மட்டும் அகராதியின் துணைக் கொண்டு பொருள் கொள்ளலாம்.
அது சரி, வழக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் பரவாயில்லை. அகராதி துணை. சில சொற்கள் இன்று வழக்கில் இருக்கும் பொருளை குறிக்காமல், அக்காலப் பொருள் கொண்டிருக்கும்.
நாறா மலர்(நறுமணம் இல்லா மலர்) - 'துர்நாற்றம்' என்ற பொருளில் நாற்றம் இன்று வழங்குகிறோம்.
'சூழ்' - இன்று சூழ்ந்து கொள்ளுதல் ( gather around) என்ற பொருளில் மட்டும் இன்று வழங்குகிறோம். ஆனால் 'சூழ்' என்ற சொல் பல குறட்களில் ' நினை' என்ற பொருளில் வழங்குவதை பார்க்கிறோம்.
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலையஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை. [ கொல்லாமை 33 : 5 ]
[ சூழ்வான் - நினைப்பவன் ]
இதுவாவது பரவாயில்லை. 'புலையர்' என்ற சொல் இன்று சாதி சார்ந்த சொல்லாக வழங்குகிறது. ஆனால் திருக்குறளில் 'புலை வினையர்' என்ற சொல் கீழ்ச் செயலை செய்பவன் என்ற பொருளை குறிப்பதாக மட்டும் அமைந்திருப்பதைக் காணலாம்.
கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. [ கொல்லாமை 33 : 9 ]
Subscribe to:
Posts (Atom)