Thursday, December 08, 2005

அடக்கமுள்ள மலை

செய்நன்றிக்கு(அதி. 11) உவமையாய் வையகம், வானம், உலகம், கடல் என்று இயற்கையின் முழுமையை நமக்கு படைக்கும் வள்ளுவர், மலையை மட்டும் சொல்லவில்லையே ?

ஒரு பிரமாண்ட தோற்றத்தை பார்க்கிறோம் அல்லது பெரிய சவாலை எதிர்கொள்கிறோம். மலைப்பாக உள்ளது என்கிறோம். மிகப்பெரிய ஒன்றின் பிரமிப்பை குறித்து நம் உணர்வை ‘மலை’ யாக குறிக்கிறோம். அடக்கம் பற்றி சொல்ல வந்த திருவள்ளுவர் , அதற்கு உருவகமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். அடக்கம் என்றாலே தோற்றத்தில் உள்ளது அல்ல. வேலைசெய்யும் இடத்தில் இதை பார்க்கலாம். ‘பணிவாக’ தோற்றம் அளிக்கும் மனிதரை பார்க்கிறோம். அவர் திரைமறைவில் குழிதோண்டுவதையும் பார்க்கிறோம். ஆனால், செல்வமும் அதிகாரமும் நிரம்பிய ஒருவரை பார்க்கிறோம்.  இந்த இரண்டும் இருந்தும் பணிவான தோற்றம் உடைய பெரியவர்களை நாம் பார்க்கிறோம். அத்தகையத் தோற்றம்..

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. [ அடக்கம் 13 : 4]