Sunday, December 11, 2005


தவம் - 1

யோகாசனம் கடந்த 10 ஆண்டுகளாக பயின்று வந்தாலும், அதன் அடுத்த நிலையான தியானத்தை முறையாக பயில வேண்டும் என்றும் சமீப காலமாக ஆசை. என் மனைவிக்கும் இது போன்ற அவா. அப்போதுதான் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தினரின் மின்னஞ்சல் ஒன்று வந்தது. வேதத்திரி மகரிஷி(http://www.vethathiri.org/FrontPage/tamil ) வடிவமைத்த எளியமுறை குண்டலினி பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த திரு எம்.ஆர்.சுப்ரமணியன்(படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர்) அவர்கள் இப்பயிற்சியை கடந்த இரண்டு வாரங்களாக மிக சிறப்பாக வழங்கினார். நானும் என் துணைவியும் இதனால் பெரும்பயன் அடந்தோம்.

எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் என்று மூன்றும் கற்றோம். அதிலும் காயகல்பம் பயிற்சி முறையோ மிக எளிது. பயனோ அளவிட முடியாது. நோயற்ற உடல், நீண்ட ஆயுள், ஒளிவீசும் ஆற்றல் ஆகியவற்றை இதனால் பெறலாம்.

கூற்றம் குதித்தலும் கைக்கூடும் ; நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு. [ தவம் 27 : 9 ]

தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு கூற்றுவனை ( யமன் ) வெல்வது கூடுவதாகும். காயகல்ப தொடர்ந்து செய்துவந்தால் இது முடியும்.


அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்