Friday, February 10, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 5

சாவடி, சத்திரம் ஆகியவற்றை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் வழிபோக்கர்களுக்கு உணவு படைத்தெல்லாம் பார்த்த நினைவில்லை. எங்கள் கிராம வீட்டில் அப்போது(சிறிய வயதில்) திண்ணை இருந்தது. அந்த தெரு வழியாக செல்வோர் அதில் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதை பார்த்திருக்கிறேன் . பிறகு எனது பெற்றோர் வீட்டை மாற்றி அமைக்கும்போது, திண்ணை காணாமல் போனது ! விருந்தோம்பலுடன் மிகவும் தொடர்புடையது திண்ணை. முன்பின் தெரியாதவர்கள் கூட திண்ணையில் இளைப்பாறுவதுடன் அந்த வீட்டில் உணவும் உண்டு தங்குவார்கள். அவசர உலகில் நாம் தொலைத்த ஒன்று விருந்தோம்பல். பெற்றோர்களே சுமைகளாக தெரியும்போது விருந்து எம்மாத்திரம் ?

இக்காலக் கட்டத்திலும் நம்மால் செய்யக் கூடியது:
(1) வரும் விருந்தினர்களை குடும்பமாக உபசரித்து, மீண்டும் வாருங்கள் என்று வழி அனுப்பி வைப்பது.
(2) நமது குழந்தைகளை வரும் விருந்தினர்களிடம் அன்பாக பழக செய்தல். நாம் விருந்தினர்களை உபசரிக்கும்போது நம் குழந்தைகளையும் ஈடுபடுத்தல்.
(3) நம் வீட்டிற்கு விருந்தினர் வருகின்றார் என்றால், அவரை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கல்.
(4) முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு வரவேற்று, விருந்தோம்பல். புலம் பெயர்ந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

விருந்தோம்பலை நம் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்தால், இவ்வுலகை விட்டு செல்லும் போது, நமக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். அந்த சொர்க்கத்தில் உள்ள வானத்தவர்க்கு(தேவர்களுக்கு) நாம் விருந்தாக அமைவோம்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
[ விருந்தோம்பல் 9 : 6 ]

No comments: