Tuesday, February 14, 2006

சொர்க்கத்தின் கதவுகள் - 6

வானுலகில் இருந்து ஒருநாள் தேவர் ஒருவர் பூமிக்கு அனுப்பப் பட்டார். எதற்காக என்றா கேட்கிறீர்கள் ? சிவனே என்று இருக்காமல் கொஞ்சம் வம்பு தும்பு செய்தாராம். மேலும் தன்னை தேவர்களின் தலைவனாக தேர்வு செய்யவில்லை என்ற புலம்பல் வேறு.

அவர் பூமியில் வந்து சேர்ந்த ஊரில் முத்து என்ற அறவழி வாழும் ஓர் செல்வந்தர் இருந்தார். ஊருக்கு பெரியவரும் கூட. அந்த ஊரில் முத்துவுக்கு பேரும் புகழும் இருந்தது. தன்னுடைய உழைப்பால் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை வறியோர்க்கும், செலவிட்டு வந்தார். இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். வழிபோக்கனாக வந்த அந்த (முன்னால்) தேவருக்கும் இருக்க இடம் கொடுத்து, தனது பண்ணையில் வேலையும் கொடுத்தார் முத்து . சென்ற இடத்திலாவது ஒழுங்காக இருக்ககூடாதா அந்த தேவர்? அங்கும் தனது வேலையை காண்பிக்க ஆரம்பித்தார். வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களை தூண்டிவிட்டு சதிசெய்ததில் முத்து கொலை செய்யப்பட்டார். முத்து வானுலகம் சென்றபோது அங்கு அவருக்காக சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. வானுலகம் வந்த முன்னால் தேவர் சிறையில் கலி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக செய்தி.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் - புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. [ புகழ் 24 : 4 ]
{ புலவர் - தேவர்.}
இவ்வுலகத்தில் சிறந்த புகழ் ஆற்றினால், வானுலகம் அத்தகையோரை போற்றும். தேவர்களை போற்றாது.

No comments: