Monday, February 06, 2006


சொர்க்கத்தின் கதவுகள் - 3

பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
[ வாழ்க்கைத் துணைநலம் 6 : 8 ]

தன்னை அடைந்த கணவர் மகிழ்ச்சி பெற்றால், அத்தகைய மனைவியார் தேவர்கள் வாழும் உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவார்.

நவீன உலகில் இக்கருத்து பொருந்துமா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டதுண்டு. மேலோட்டமாக பார்க்கும் அனைவருக்கும் அப்படிதான் இருக்கும். மனைமாட்சி(குறள் 6 : 2 ) என்றும் , மாண்பு(6 : 3 ) என்றும் மனையாளை குறிப்பிட்டுவிட்டு, இங்கே எப்படி சொல்லலாமா ?

மனைவியான பெண் தன்னை மட்டும் நிலைநிறுத்தி வாழ்ந்தால் அத்தகைய குடும்பங்கள் என்ன ஆகும் என்பதை பார்க்கிறோம். அதேபோல் கணவனும் சுயநலத்துடன் செயல்பட்டால் அதே விளைவுதான். ஆனால் மனைவியை ஆதாரமாக கொண்டு தன் வாழ்க்கையை அமைக்கும் கணவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். வாழ்க்கை நிறைவு பெறும். அத்தகைய மனையாள் தேவர்கள் வாழும் ( புத்தேள் ) உலகத்திலும் பெருஞ்சிறப்பு பெறுவது உறுதி. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது இந்த உண்மை புரியும். காந்தி திரைப்படத்தை பலமுறை பார்த்திருந்தாலும், சமீபத்தில் டிவிடி வாங்கி குடும்பத்துடன் பார்த்தேன். அன்னை கஸ்தூரிபாவின் துணையும் ஆதாரமும் இல்லாமல், காந்தி உலகம் வியக்கும் பணிகளை செய்திருக்க முடியுமா ? ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காந்தி நிகழ்த்திய போராட்டங்களிலும், சமுதாய பணிகளிலும் அன்னை கஸ்தூரிபா காந்தி உற்றதுணையாக நின்றதை பார்க்கிறோம். வியக்கிறோம்.

அகத்தில்(வீட்டில்) வெற்றி பெறாதவன், புறத்தில்(உலகில்) வெற்றி பெற முடியாது அல்லவா ?

1 comment:

Unknown said...

உங்களது இந்த நற்செயல்கள் தொடர வாழ்த்துக்கள்