Thursday, November 10, 2005

வேலையும் இதயமும்..

இதயம் எவ்வளவு முக்கியம் என்பது அது ஒழுங்காக பணி செய்யும் போது நமக்கு புரிவதில்லை. மாரடைப்பு இறப்புக்கு ஒரு முன்னனி காரணம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த மாரடைப்பு வார நாட்களில் அதிகமாக எந்த நேரங்களில் வருகிறது என்ற ஆராய்ந்ததில் ..

திங்கள் காலை

என்பது தெரிகிறது. போட்டியும், வேகமும் நிரம்பியுள்ள இவ்வுலகில் இந்த ஆய்வின் முடிவு நமக்கு வியப்பு இல்லை தானே ?

நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்திருக்கிறதா? நம்மை நாமே இக்கேள்வியை கேட்டால் வேலை 'அழுத்தத்தில்' இருந்து விடுபடலாம்.

அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. [அன்புடைமை- 8 : 3 ]

[ வழக்கு - lifestyle, habit ]

அன்போடு செய்யும் செயல்கள், உயிரும் உடலும் போல இணைபிரியாதது. நம் வாழ்வில் அன்பில்லாத செயல்கள் பெருகினால், உயிர் இந்த உடலை விட்டு பிரிந்துவிடும் எச்சரிக்கையாக இக்குறளை நாம் கொள்ளலாம்.

மேலும் எடுத்த வேலையில் உற்சாகமும் ஈடுபாடும் நிறைந்து பணியாற்றும் நண்பர்களை பார்க்கிறோம். அவர்களின் வெற்றியும் சிறப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. அந்நிலையை 'Passion' அல்லது 'ecstasy' என்று அழைக்கிறோம். இந்நிலையை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. [ அன்புடைமை 8 : 5 ]


No comments: