Monday, November 07, 2005

அகமும் புறமும்


அவர் வெள்ளித் திரையில் புகழ்பெற்ற நடிகை.  தனது நடிப்பினாலும் அழகினாலும் இலட்சக் கணக்கான இரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர். தமிழ்த் திரை உலகில் உச்சத்தில் இருந்தபோது, அவர் நடித்த திரைப்படம் வெளிவந்து 200 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருந்த நேரம்…

இலண்டன் மாநகரில் 100 பெரிய பணக்காரர்களில் ஒருவர் அந்த தமிழர். அவருடைய பையன், நடிகையின் திரைப்படத்தை பார்த்ததில் இருந்து ‘அடைந்தால் அந்த அழகுதேவதை. இல்லேல் துறவறம்’ என்ற முடிவுக்கு வந்தான். பெற்றோரிடன் தனது ஆசையை கூறியவுடன் , அவர்களும் சரியென்றனர்.
அப்புறம் என்ன கெட்டிமேளம் தான் !. திருமண செலவு மட்டும் சில மில்லியன் பவுண்டுகள் செலவானதாக சொல்கிறார்கள்.

ஓராண்டு கூட நிறைவுராத நிலையில் மணமுறிவு என்று செய்தி. நடிகை தமிழ்த் திரையில் இரண்டாம் சுற்றுக்கு வந்துவிட்டார் என்றும் அந்த பையன் பெங்களூரில் உள்ள மடம் ஒன்றில் சேர்ந்துவிட்டதாகவும் நமக்கு வரும் கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்?  யாக்கை
அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு . [ அன்புடைமை 8 : 9 ]

No comments: