Saturday, November 05, 2005

சிங்க நடையிட்டு வீரன் ஒருவன் வந்தான்..


ஒருவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்பயணத்தில் சில நாட்களுக்கு பிறகு இரவு உணவருந்த ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள சேவகரை(bearer) அழைத்து “ கருகிப்போன  தோசை ஒன்றை உப்பில்லாச் சட்டினியுடன் கொண்டு வா” என்றார். அந்த சேவகரும் வந்தவருக்கு மரை கழண்டுவிட்டதா என்ற ஓசனையுடன் உள்ளே சென்று அவர் கேட்டதையே கொண்டுவந்தார். மேசையில் அதை வைத்தவுடன் அந்த சேவகரை முன்னே உள்ள நாற்காலியில் உட்காரச் சொன்னார். அமர்ந்தவுடன் சேவகரை பார்த்து, வந்தவர் “ நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நீ நச்சரித்துக் கொண்டே இரு. எனக்கு வீட்டு ஞாபகம் ! “ என்றாரே பார்க்கலாம். இது நாட்டு நடப்பு.

இத்துணுக்கை படித்தவுடன் உங்களைப் போல் நானும்தான் நம் வீட்டு கதையை கேட்ட மகிழ்ச்சியில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தேன். கூட்டுக் குடும்பம் இல்லாத சூழலில் கணவன் – மனைவி இடையே உள்ள உராசல்கள் எத்தனை எத்தனை !  உரசல்கள் சற்று அதிகமாகும் போது விரிசல்-சண்டை-விவாகரத்து என்று பெருகிக் கொண்டே போவதை பார்க்கிறோம்.

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை - இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

வீட்டில் பிரச்சனைகள் இல்லாதவர்கள் மட்டுமே சிங்கம் போல் பீடு நடை போட முடியும். ‘இகழ்வார்முன்’ என்பது வலியுறுத்தல் . அதாவது மற்றவர்கள் நம்மை இகழும்போது கூட நம்மால் சிங்கம் போல் பீடு நடையிட்டு தடைகளை நீக்கி வெற்றி பெற முடியும் ! உண்மைதானே ?

No comments: