இல்லறம், துறவறம் என்று எதில் இருந்தாலும் நம்மால் தவத்தை மேற்கொள்ள முடியும். தவம் என்றாலே கண்ணை மூடி, மனதை ஒருநிலைப்படுத்துதல் மட்டும் அன்று. பெற்றோர்கள் நல்ல உதாரணம். குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் ஏராளம். தற்போதைய துன்பங்களை பொறுத்து, எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கப்போகும் மகிழ்ச்சிக்காக பெற்றோர்கள் வாழ்வதும் தவம் தான். ஓருயிராகட்டும், ஆறு அறிவு படைத்த சக மனிதர்களாக ஆகட்டும். அனைவரிடத்தும் அன்பு செலுத்தி எவ்வித துன்பம் செய்யாத அரிய மனிதர்களை பார்க்கிறோம்.
உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. [ தவம் 27: 1]
ஆதலால் புற உருவத்தில் மயங்காமல், உண்மையான தவத்தை மேற்கொள்வோரை போற்றி , நாமும் தவமிருக்கலாம் வாருங்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment