Monday, August 01, 2005

குறள் நடை

பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஒரு நடை இருக்கும். அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் இளையோருக்கும் நடையென்று ஒன்று இருக்கும். எனக்கு? நான் வேலைக்கு சென்றுவர சுமார் 1.5 மைல் நடக்கின்றேன். மேலும் பெரும்பான்மையான மதிய இடைவேளைகளில் வேலை செய்யும் இடத்தருகே ஒரு அழகிய பூங்கா உள்ளது. அதை உத்தேசமாக ஒரு நாளைக்கு 4 முறை சுற்றினால் 1 மைல் நடக்கின்றேன். இப்படி 2.5 மைல் நடக்கும்போது ஏதோ ஒரு சிந்தனையில் மனதை அலையவிடுவதை விட கடந்த ஒரு மாதமாக நான் மனப்பாடம் செய்துள்ள குறட்பாக்களை பாடிக்கொண்டே நடக்கின்றேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில்.. ஒரு நாள் 3-7 அதிகாரங்களில் உள்ள ஒற்றை எண்களாக .. இன்னொரு நாள் இரட்டை எண்களாக .. ஒரு நாள் 140 - 111 கீழிருந்து மேலாக...

நமது குறள் நடை எப்படி இருக்கிறது ?

No comments: