Sunday, September 09, 2007


கலங்கரை விளக்கம்


அந்த துறைமுக நகரத்தின் கலங்கரை விளக்கம்(light house) புகழ் பெற்றது. பழமையானதும் கூட. அங்கு பணிபுரியும் இளங்கோவின் அன்றாட வேலை 12 பேர் கொண்ட குழுவுடன் அந்த விளக்கத்தின் கண்ணாடிகளையும் விளக்குகளையும் துடைத்து வைப்பது தான். கப்பல்களுக்கு சரியான வழிகாட்ட வேண்டுமல்லவா? இளங்கோ தன் குழுவினர்க்கு சொல்வது... ' விளக்கு கண்ணாடியில் சிறு தூசியாக இருந்தாலும் அலட்சியமாக இருக்க கூடாது. கப்பல்களுக்கு ஆபத்தாக முடியும் அல்லவா !'
மேலே சொன்ன உதாரணத்தில் இவற்றை பொருத்திப் பாருங்கள் :
கலங்கரை விளக்கம் --> குடி( Family or Unit of society with family values)
வெளிச்சம் --> குடிமையின் கடமை
மாசு(அழுக்கு) --> சோம்பல்
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும் . [ மடியின்மை 61 : 1 ]
சோம்பல் என்னும் மாசு ஏற்பட, குடி என்னும் குன்றா விளக்கம் மாய்ந்து கெட்டு விடும்.
குன்றா களங்கரை விளக்கமாய், நமது குடி ஒளியட்டும் !
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

2 comments:

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

naanjil said...

Good analysis. Keep it up the good work.
Peter