Saturday, June 16, 2007

"மன்னா, நமது பகைவன் வெல்வது உறுதி" என்றான் அங்கு அவசரமாக வந்த உளவாளி.

" ஏன்? நம் பகைவனின் படை பலமாக உள்ளதா? " கேட்டான் அரசன்.

அதற்கு உளவாளி, " இல்லை மன்னா. படைபலம் குறைவுதான். ஆனால் தாங்களின் பலவீனத்தை அறிந்துகொண்டு அழகிய பெண்களை, படையின் முன்வரிசையில் அனுப்புகிறான், பகைவன்!"

இது ஆனந்த விகடனில் சில மாதங்களுக்கு முன் படித்த துணுக்கு. வரலாற்றில் அரசுகள் வீழ்வதற்கு இதுபோன்ற பலவீனங்கள் முகாந்திரமாக இருந்ததை பார்க்கிறோம்.

இன்றைய அரசுகளிலும், நிறுவனங்களிலும் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்கள் குறுக்கு வழியாக நினைப்பதும் 'அவரின் பலவீனம் என்ன? எப்படி 'கவனிக்கலாம்' ?' அன்றோ?

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். [ குற்றம் கடிதல் - 44 : 10 ]
{ உய்த்தல் - நுகர்தல் ; ஏதிலார் - பகைவர் ; நூல் - சூழ்ச்சி }

ஒருவர் தான் மயங்கி விரும்பும் ஒன்றை தன் பகைவருக்கு தெரியாமல் நுகர்ந்தால் மட்டுமே பகைவனின் சூழ்ச்சியில் இருந்து தப்ப முடியும். அத்தகைய பலவீனங்கள் இல்லாமல் இருப்பதே தலைவனுக்கு அழகு.


அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

2 comments:

naanjil said...

Thiru Malar Selvan:
unkal Tamil sevai vazha, valarka.
Your writings on Thirukkural are
thought provoking. Keep it up.
Make a plan to publish as book in
the future.
See you in FeTNA 2007

Anonymous said...

vanakkam ayya,
naan oru manavi.ungal karuthugal enakku thelivai koduthana.nanri.ungal pani thodara eraivanai vendugiren.