Saturday, November 11, 2006

அறிவு என்னும் தெய்வம் - 2


இரண்டு வருடங்களுக்கு முன் சுனாமியால் ஆயிரக் கணக்கானோர் அழிந்து போன துயரம் இன்னும் நம்மில் உள்ளது. ஆனால் அத்தருணத்தில் அந்த அழிவுப் பகுதிகளில் இருந்த பறவைகளும்,விலங்குகளும் ஒன்றுகூட இறக்கவில்லை என்ற செய்தி வியப்பூட்டுகிறது.

http://www.naturesync.org/tsunami2.htm

யாருக்கு ஆறாவது அறிவு என்பது சிந்திக்க தகுந்தது. நாம் அனைவரும் அளவற்ற வால் அறிவுடன் பிறக்கிறோம் என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம் . ஆனால் 'நான் என்ற நினைப்பால் ( ego) ' , அத்தகைய அறிவுடன் உள்ளத் தொடர்பை இழந்து விடுகிறோம். பறவைகளும் விலங்குகளும் நமக்குள்ள வால் அறிவை பெற்றுள்ளன. ஆனால் அவை வளரும்போது நம்மை போல் தன்முனைப்பு(ego) இல்லாததால், பேரறிவுடனான தொடர்பு எப்போதும் உள்ளது.

அறிவுடையார் ஆவது அறிவார் ; அறிவிலார்
அஃதறி கல்லா தவர் [ அறிவுடைமை 43 : 7 ]
அறிவுடையார் நடக்கப் போவதை அறிவர் ; அறிவிலாதவர் அவ்வாறு அறியாத கல்லாதவர் ஆவர்.


அத்தகைய அறிவுள்ள விலங்குகளை பற்றி வேறு சில தகவல்கள்.....
கிராமங்களில் பறவைகளின் பறக்கும் திசையை வைத்தும், விலங்குகளின் சத்தத்தை வைத்தும் - பெரியவர்கள் சில அனுமானங்கள் கூறுவது இயற்கையோடு இயந்த வாழ்க்கையை காட்டுகின்றது அல்லவா?


எங்கள் வீட்டு தொட்டியில் உள்ள மீன்களுக்கு அன்றாடம் உணவளிப்பது என் வேலை. அன்று அவ்வாறு உணவு போட்டபின், ஓர் மீன் மட்டும் உணவருந்தாமல் அசையாமல் இருந்தது. இதற்கு பசியில்லையோ என்று நினைத்தேன். அடுத்த நாளும் அப்படித்தான்... மீன் இப்படி இருக்கிறதே என்ற கவலையில், பராபரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் சொன்ன தகவல் எனக்கு வியப்பை தந்தது. சாப்பிடாத அந்த மீன் நோயுற்றதென்றும், ஆதலால் அந்த நோய் நீங்கும் வரை எத்தகைய உணவையும் உண்ணாதென்றும் கூறினர். எத்தகைய பேருண்மையை இந்த மீன் அறிந்திருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் செல்லும் பறவைகளின் அறிவு இன்னும் வியப்பூட்டுவதாக அமைகிறது.

விலங்கினமே, பறவையினமே! உன்னில் உள்ள இத்தகைய பேரறிவு எனக்கும் கிட்டாதா?

No comments: