Thursday, December 29, 2005


பொன்போன்ற மேனி...

எவ்வித அலங்காரமோ அல்லது அணிகலனோ இல்லாமல் சிலர் பொன்போல் ஒளிவிட்டு திகழ்வதை பார்க்கிறோம். உதாரணத்திற்கு இங்குள்ள சில ஞானிகளை பாருங்கள்.
யோகி இராம்சுரத்குமார். அருள்வடிவானவர்.


மனித தொண்டே மகேசன் தொண்டாக கொண்டு வாழ்ந்த அன்னை தெரசா.


பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிய வாழ்வியல், இறை உணர்வு ஊட்டி வரும் வேதத்திரி மகரிஷி அவர்கள்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் - துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு. [ தவம் 27 : 7 ]

பொன்னை சுட்டால் வரும் சுடர்போல், துன்பத்தை நோற்பவர்கள்(தவமிருப்பர்கள்) ஒளிவீசும் தன்மை பெறுவார்கள்.

இத்தகைய நிலையை அடைந்தவர்களை உலகத்தின் உயிர்கள் அனைத்தும் தொழும்.

தன்னுயிர் தான் அறப் பெற்றானை- ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும் [ தவம் 27 : 8 ]

நாம் அனைவரும் உயிர் பெற்றுள்ளோம். ஆனால் அவ்வுயிரை 'முழுமையாக' பெற்றுள்ளோமா என்பது சிந்திக்க வேண்டியது. உயிர் என்றால் என்ன ? அவ்வுயிரை நாம் முழுமையாக பெற சில பயிற்சிகளை மனவளக் கலை மன்றத்தினர் தொகுத்துள்ளனர். அதில் உயிரை நாம் முழுமையாக பெறுவதற்கு உதவுவது காய கல்ப பயிற்சி. ஆர்வமுள்ளோர்

www.vethathiri.org

உலகம் முழுவதும் இம்மன்றத்தின் ஆசிரியர்கள் உள்ளனர்.

அன்புடன்,

கரு.மலர்ச் செல்வன்



No comments: