Monday, December 04, 2006

பொன் முட்டையிடும் வாத்து


நீங்கள் வாத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை பார்த்திருக்கிறீர்களா? முருகேசன் வீட்டுக்கு சென்றால், சுவரில் பொன் நிறமான, பொன் முட்டையிடும் வாத்தின் போட்டோ ஒன்றை பார்க்கலாம். ஆம் போன மாதம் தான் அந்த வாத்து இறந்து போனது.

ஒரு வருடத்துக்கு முன்னெல்லாம் முருகேசனுக்கு அன்றாட வாழ்க்கையே சிரமம்தான். அவன் துயரங்களை பார்த்த கடவுள் அழகிய பொன் நிற வாத்து ஒன்றை பரிசாக அளித்தார். அந்த வாத்து தினமும் ஒரே ஒரு தங்க முட்டையை இடும். தங்க முட்டைகளை விற்று முருகேசன் செல்வமும் செழிப்பும் பெறலானான். தினமும் ஒவ்வொன்றாக, வாத்து பொன் முட்டையை இட்டு, அதை விற்று வாழ பொறுமை இல்லாதவனான் முருகேசன். ஒரு சிந்தனை தோன்றியது. தினமும் ஒரு முட்டையிடும் வாத்தை கொன்று விட்டால், அனைத்து முட்டைகளும் நமக்கு கிடைக்குமல்லவா? அடுத்த நிமிடமே அந்த வாத்து சதக்...வயிற்றின் உள்ளே பார்த்தால் ஒன்றும் இல்லை. அடடா! உடனடி தேவைகளுக்கு ஆசைப்பட்டு முதலையே இழந்தான் முருகேசன்.

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவு உடையார். [ தெரிந்து செயல்வகை 47 : 3 ]