Friday, December 23, 2005

எண் என்ப..

எண் என்பது கணித எண்ணையும் குறிக்கும். நமது மனதில் எழும் எண்ணத்தையும் குறிக்கும். இரண்டிற்கும் ஒரே பெயரை வைக்க காரணம் என்ன ? நம் மனதில் ஒரு நாளைக்கு சுமாராக 70,000+ எண்ணங்கள் எழுவதாக படித்திருக்கிறேன். அந்த எண்ணங்களுக்கு நடுவே உள்ள இடைவெளி/அமைதியில் நம்மை உணர்ந்து மெய்ஞானம் பெற முடியும். எண்ணங்கள் தொடர்ச்சியாக வருவதால்தான் எண் என்று காரணப்பெயராக அமைந்துள்ளதாக நினைக்கிறேன். எண்ணங்களை சீராக்க மணிமாலை உபயோகிப்பதும் இதற்குதான்.

அலை அலையாய் எழும் எண்ணங்களின் ‘இடையே’ நாம் அமைதியாக தவமிருப்பதை ‘எண்ணின் தவம்’ என்று கூறலாம். இந்த தவநிலையில்
நான் யார் ?
இந்த பிரபஞ்சத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
எனது படைப்பின் காரணம் என்ன ?
ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அந்நிலையை அடைந்த ஒருவர் ‘இது நடக்க வேண்டும்’ என்று நினைத்தால்(Intent) நடக்கிறது. தீயவற்றை அழிப்பதும், அல்லது புதினங்களை ஆக்குவதும் இந்நிலையில் உள்ள எவராலும் முடியும். மதமோ,மொழியோ, குலப்பிறப்போ, கல்வியோ இதற்கு தடையாக அமைய முடியாது.

ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். [ தவம் 27 : 4 ]



அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

No comments: